வரையறுக்கப்பட்ட கல்விச் சேவை ஊழியர்களின் கூட்டுறவுச் சிக்கனக் கடனுதவு சங்கத்தின் கிழக்கு மாகாணத்திற்கான இயக்குனராக ஆசிரியர் பாவநாசம் செல்லத்துரை தேர்ந்தெடுக்ப்பட்டுள்ளார்.
பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசலையில் பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராக கடமையாற்றி வருகின்ற இவர் சென்ற மாதம் நடைபெற்ற பொதுச் சபை உறுப்பினர்களுக்கான தேர்தலில் பட்டிருப்பு வலயத்தின் சார்பில் பொதுச் சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
பொதுச் சபை உறுப்பினர்களுக்கான கூட்டம் அண்மையில கொழும்மில் அமைந்துள்ள தலைமைக் காரியாலத்தில் நடைபெற்றது. இதன் போதே கிழக்கு மாகாணத்திற்கான இயங்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். அரச கரும மொழி திணைக்களத்தில் சிங்கள மொழிக் கான வளவாளராகவும் செயற்பட்டு வருவதுடன் மும் மொழியிலும் தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
0 Comments