Home » » மட்டக்களப்பு புணாணை பாடசாலையில் குதூகல இல்ல விளையாட்டுப் போட்டி!

மட்டக்களப்பு புணாணை பாடசாலையில் குதூகல இல்ல விளையாட்டுப் போட்டி!

கல்குடா வலயத்தின் கோறளைப்பற்று வடக்கு கல்விக் கோட்டத்தில் அமைந்துள்ள புணாணை  அ.த.க.பாடசாலையில் 24.03.2016(வியாழக்கிழமை) இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் ஏ.றொபட்கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ். பரமேஸ்வரன், கிராம உத்தியோகத்தர் எஸ்.முருகானந்தம், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான க.ஜெகதீஸ்வரன்,க.சிவறஞ்சினி, க.ரமேஸ், அதிபர்களான என்.மகாலிங்கம்,டி.கேதீஸ்வரன், சுகாதாரப் பரிசோதகர் எஸ்.அமிர்தாப் , ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள், பெற்றார்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நிகழ்வுகளை சிறப்பித்திருந்தனர்.  
 
 



Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |