Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இனப்பிரச்சினை குறித்து அரசுடன் கூட்டமைப்பு பேச்சு நடத்ததும்: சம்பந்தன் தலைமையில் குழு நியமனம்

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பிற்கும் அர­சாங்­கத்­திற்­கு­மி­டையில் விரைவில் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண்­பது குறித்த பேச்­சு­வார்த்­தை­யொன்று இடம்­பெ­ற­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.  இது தொடர்பில் ஆராயும் நோக்கில் எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தலை­மையில் குழு­வொன்றும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.
தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் ஒருங்­கி­ணைப்­புக்­குழுக் கூட்டம் நேற்று கொழும்பில் நடை­பெற்­றது. இதில் பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்கள், மற்றும் முக்­கி­யஸ்­தர்கள் பங்­கேற்­றி­ருந்­தனர். இக்­கூட்­டத்தில் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சோ.சேனா­தி­ராஜா மற்றும் புளொட் தலை­வரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தரு­ம­லிங்கம் சித்­தார்த்தன் ஆகியோர் பங்­கேற்­றி­ருக்­க­வில்லை.
இந்­நி­லையில் கூட்டம் 10மணிக்கு ஆரம்­ப­மா­ன­போது முதலில் அர­சியல் கைதிகள் விடயம் தொடர்­பாக நீண்­ட­நேரம் ஆரா­யப்­பட்­டடு உண்­ணா­வி­ர­தத்தை கைவி­டு­மாறு கோரு­வ­தெ­னவும் துரித நட­வ­டிக்கை எடுப்­ப­தெ­னவும் முடி­வெ­டுக்­கப்­பட்­டது.
அத­னைத்­தொ­டர்ந்து பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யாக மாற்­றி­ய­மைக்கும் பிரே­ர­ணையில் புதிய அர­ச­யி­ல­மைப்பை உரு­வாக்­குதல் என்ற பகு­தியில் புதிய என்ற சொற்­பதம் நீக்­கப்­பட்­டமை, இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு என்­பதை தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வு என மாற்­றி­யமை உட்­பட சுதந்­தி­ரக்­கட்­சியால் கோரப்­பட்ட ஒன்­பது திருத்­தங்­களும் ஐக்­கிய தேசியக் கட்­சியால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளமை தொடர்­பா­கவும் ஆரா­யப்­பட்­டுள்­ளது.
அத்­துடன் பிரே­ரணை மீது வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வுள்ள நிலையில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்­பாக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள அடிப்­படை விட­யங்கள் குறித்து அர­சாங்­கத்­துடன் பேச்­சு­வார்த்­தை­யொன்றை நடத்தி உடன்­ப­டிக்­கை­யொன்றை மேற்­கொள்­ளுதல் அல்­லது வெளிப்­ப­டைத்­தன்­மை­யுடன் இணக்­கப்­பாட்டை ஏற்­ப­டுத்தல் வேண்­டு­மென பங்­கா­ளிக்­கட்­சி­யொன்றால் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.
இதன்­போது புதிய என்ற சொற்­பதம் நீக்­கப்­பட்­ட­மையால் எவ்­வி­த­மான விளை­வு­களும் ஏற்­ப­டாது. அர­சி­ய­ல­மைப்பை வரைதல் என்­பது புதிய அர­சியல் அமைப்பை வரை­வ­தே­யாகும் என தமக்கு தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. மேலும் தேசிய பிரச்­சினை எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­மையால் இனப்­பி­ரச்­சினை உட்­பட பல்­வேறு விட­யங்­க­ளையும் யாப்பில் உள்­வாங்­கு­வ­தற்­கான ஏது­நி­லைகள் ஏற்­பட்­டுள்­ளன. ஆகவே அவ்­வி­டயம் தொடர்பில் அச்­ச­ம­டை­யத்­தே­வை­யில்­லை­யென அவ்­வி­ட­யங்­களை கையாளும் பாரா­ளு­முன்ற உறுப்­பி­னரால் எடுத்­து­ரைக்­கப்­பட்­டது.
அத­னைத்­தொ­டர்ந்து அர­சாங்­கத்­துடன் பேச்­சு­வார்த்­தை­யொன்று நடத்­தப்­பட்டு உடன்­ப­டிக்கை அல்­லது இணக்­கப்­பாட்டை எட்­டு­வ­தென்­பது அவ­சி­ய­மாகும். அதனை மறுக்­க­வில்­லை­யென கூட்­ட­மைப்பின் தலைமை குறிப்­பிட்­ட­துடன் தென்­னி­லங்­கையின் சம­கால நிலை­மை­களை சுட்­டிக்­காட்­டி­யது. ஆகவே இனப்­பி­ரச்­சினை தொடர்பில் எமது அடிப்­படை விட­யங்­களை முன்­வைத்து பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யாக மாற்­றி­ய­மைக்கும் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்­பிற்கு முன்னர் பேச்­சுக்கள் நடத்­து­வ­தற்கு முயல்­வோ­மாயின் அது குழப்ப நிலை­மைகள் உரு­வா­கு­வ­தற்கு ஏற்­பு­டை­ய­தா­கி­வி­டு­மெ­னவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.
இந்­நி­லையில் குறித்த பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டதன் பின்னர் அர­சாங்­கத்­துடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தெ­னவும் அதன்­போது கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­களின் பிர­தி­நி­தி­களின் பங்­கேற்பும் நிச்­ச­ய­மாக இடம்­பெ­று­மெ­னவும் குறிப்­பி­டப்­பட்­டது.
இத­னை­ய­டுத்து வடக்கு முதல்வர் உட்­பட மாகாண சபை விவ­காரம் தொடர்பில் இரண்டு பங்­கா­ளிக்­கட்­சி­களின் தமது கருத்­துக்­களை முன்­வைத்­தன . இதன்­போது முத­ல­மைச்சர் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­களை முறை­யாக கையாள்­வ­தற்­கான பொறி­முறை, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், தலைமை உட்­பட வடக்கு மாகாண சபை­யுடன் நல்­லு­றவைப் பேணு­வ­தற்­கான ஒருங்­கி­ணைப்­புக்­குழு கூட்­டங்கள் முறை­யாக நடத்­தப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சியம் உள்­ளிட்ட விட­யங்கள் கடந்த காலங்­களில் வலி­யு­றுத்­தப்­பட்­ட­போதும் அவை முறை­யாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்­லை­யென்­பது பிறி­தொரு கட்­சித்­த­லை­மையால் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.
இத­னை­ய­டுத்து இப்­பி­ணக்­குகள் தொடர்­பாக உரிய தீர்­வொன்றை கூட்­ட­மைப்பின் தலைமை பெற்­றுக்­கொ­டுக்­க­வேண்டும். விரைவில் வட­மா­கா­ணத்­திற்கு விஜயம் மேற்­கொண்டு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வேண்­டு­மெ­னவும் கோரிக்கை விடுக்­கப்­பட்­டது. அதன்­போது கொழும்பில் முதல்­வ­ருடன் நடை­பெற்ற சந்­திப்பில் கலந்­து­ரை­யா­டிய விட­யங்கள் குறித்து கூட்­ட­மைப்பின் தலைமை வெளிப்­ப­டுத்­தி­ய­தோடு விரைவில் வடக்­கிற்­கான விஜ­யத்தை மேற்­கொண்டு இவ்­வி­ட­யத்தை முறை­யாக கையாள்­வ­தா­கவும் குறிப்­பிட்­டது.
மேலும் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­க­ளி­லி­ருந்து தமி­ழ­ர­சுக்­கட்­சிக்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இணைந்து கொள்­வ­தற்கு இட­ம­ளிக்­க­கூ­டா­தென மூன்று பங்­கா­ளிக்­கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து கோரிக்கை விடுத்­தன. தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைவர் மாவை.சோ.சோன­தி­ராஜா வருகை தரா­மை­யினால் இவ்­வி­டயம் தொடர்­பாக இறுதி முடி­வொன்று எட்­டப்­ப­ட­வில்லை.
கூட்­ட­மைப்பை அர­சியல் கட்­சி­யாக பதிவு செய்யும் நட­வ­டிக்­கைகள் காலம் தாழ்த்­தப்­படும் நிலையில் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­த­மொன்றை மேற்­கொள்­வது குறித்த யோச­னைகள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­போதும் அதில் கையொப்­ப­மி­டாத நிலை­மையே நீடிக்­கின்­றது. இவ்­வா­றான நிலையில் கூட்­ட­மைப்­பாக எதிர்­கா­லத்தில் முன்­னெ­டுக்­க­வுள்ள விட­யங்கள் சில­வற்றை உள்­ள­டக்­கிய ஆவ­ண­மொன்றை வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் ஏனைய கட்­சி­க­ளி­டத்தில் கைய­ளித்தார்.
இதன்­போது குறித்த ஆவ­ணத்தில் உள்ள விட­யங்கள் சில­வற்றில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும் என்பது ரெலோவின் முக்கியஸ்தரால் வலியுறுத்தப்பட்டதோடு மாவை.சேனாதிராஜா மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் சமுகமளிக்க முடியாத நிலையில் அதனை இறுதி செய்யமுடியாதெனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் அரசியல் தீர்வு உட்பட அனைத்து விடயங்களையும் எதிர்காலத்தில் கையாள்வதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் மாவை.சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ்பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், சித்தார்த்தன், ஆர்.ராகவன் ஆகியோர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மீண்டும் எதிர்வரும் செவ்வாய்கிழமை மீண்டும் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments