Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சுதந்திரம் இல்லாத நாட்டில் எவ்வாறு சுதந்திர தின விழாவில் கலந்துகொள்வது? மகிந்த கேள்வி

சுதந்­திரம் இல்­லாத நாட்டில் என்னால் சுதந்­தி­ர­தின நிகழ்வில் கலந்­து­கொள்ள முடி­யாது. எனது குடும்­பமும் எனது நண்­பர்­க ளும் சிறையில் வாடும் போது என்னால் சுதந்­தி­ர­மாக செயற்­பட முடி­யாது. அதேபோல் எனது அணி­யினர் அரச நிகழ்­வு­களை புறக்­க­ணிக்கும் நிலையில் என்னால் அவ்­வாறு அரச நிகழ்வில் கலந்­து­கொள்ள முடி­யாது என முன்னாள் ஜனா­தி­பதி தெரி­வித்தார்.
இலங்­கையின் அரச நிகழ்­வு­களில் தமிழில் தேசிய கீதம் இயற்ற அவ­சி­ய­மில்லை. சிங்­க­ளத்தை இன்று தமிழில் இயற்ற கேட்­பார்கள், இன்னும் சிலபேர் நாளை உருது மொழி­யிலோ அல்­லது அரே­பிய மொழி­யிலோ தேசிய கீதம் இயற்ற அனு­ம­திக்க வேண்டும் என்று போராட ஆரம்­பிப்­பார்கள் எனவும் அவர் குறிப்­பிட்டார்.
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ நேற்று அப­யா­ராம விகா­ரையில் வெளி­நாட்டு பிர­தி­நி­தி­களை சந்­தித்­தி­ருந்தார். இந்த சந்­திப்பின் பின்னர் கேச­ரிக்கு தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட் டார். அவர் மேலும் கூறு­கையில்,
கேள்வி : -பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா ஐக்­கிய தேசிய முன்னணியில் தன்னை இணைத்­துக் ­கொண்­டுள்ளார். இது தொடர்பில் உங்­க ளின் நிலைப்­பாடு என்ன?
பதில்:- அதைப்­பற்றி எந்த கருத்தும் என்­னிடம் இல்லை. ஏனெனில் இவர்கள் இன்று புதி­தாக இணை­ய­வில்லை. கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போதே இவர்கள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து தானே செயற்­பட்­டனர். ஆகவே அதில் புதிய மாற்றம் ஒன்றும் இல்லை.
கேள்வி:- அவ­ருக்கு எவ்­வா­றான பதவி கிடைக்கும் என எதிர்­பார்க்­கின்­றீர்கள்?
பதில்:- அதை என்னால் தெரி­விக்க முடி­யாது. நான் சொல்லும் பத­வியை அவர் வாங்­கிக்­கொள்­ளவும் போவ­தில்லை. ஆகவே அவ­ருக்கு எவ்­வா­றான பத­வி­யா­வது கிடைக்­கட்டும்.
கேள்வி:- அப­யா­ராம விகாரை கூட்­டத்தில் என்ன கலந்­து­ரை­யா­டப்­பட்­டது?
பதில்:- இத்­தா­லியில் இருந்து வந்­துள்ள இலங்கை பிர­ஜைகள் சில­ரையும் சிவில் அமைப்­பினர் சில­ரையும், தொழிற்­சங்க உறு ப்­பி­னர்கள் சில­ரையும் நான் சந்­தித்து பேச்­சு­ வார்த்தை நடத்­தினேன். இலங்­கையின் இப்­போ­தைய நிலை­மைகள் தொடர்பில் அவர்கள் எனக்கு தெளிவுபடுத்­தினர். சர்­வ­தேச மட்டத்தில் அவர்­களின் பார்வை எவ்­வாறு இருக்­கின்­றது என்­பது தொடர்பில் எனக்கு தெளிவுபடுத்­தினர். இன்று நிலைமை அவ்­வாறு தான் உள்­ளது. எனக்கு இந்த நாட்டில் நடப்­பதை விடவும் அவர்­க­ளுக்கு தான் நன்­றாக தெரி­கின்­றது.
கேள்வி:- சுதந்­தி­ர­தின நிகழ்வில் கலந்­து ­கொள்­ளா­தது ஏன்? புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளீர்களா?
பதில்:- அழைப்பு கிடைக்­கப்பெற்றது. ஆனால் நான் கலந்­து­கொள்­ள­வில்லை. இன்று எனக்கு சுதந்­திரம் இல்லை. எனது மகன், எனது நண்­பர்கள் சிறையில் உள்­ளனர். பல அச்­சு­றுத்­தல்கள், குற்­றச்­சாட்­டுகளை முன்­வைத்து மக்கள் மத்­தியில் என்னை அவ­ம­திக்­கின்­றனர். சுதந்­திரம் இல்­லாத நாட்டில் என்னால் சுதந்­தி­ர­தின நிகழ்வில் கலந்­து­கொள்ள முடி­யாது. அதேபோல் எனது அணி­யினர் அரச நிகழ்­வு­களை புறக்­க­ணிக்கும் நிலையில் என்னால் அவ்­வாறு அரச நிகழ்வில் கலந்­து­கொள்ள முடி­யாது.
கேள்வி:- குடும்­பத்தின் மீது சுமத்தும் குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் இப்­போது எவ்­வா­றான நிலையில் உள்­ளீர்கள்?
பதில்:- என்னால் இந்த குற்­றச்­சாட்­டு­களை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. எனது சகோ­த­ரர்கள், எனது புதல்­வர்கள், மனைவி என அனை­வ­ரையும் தண்­டிக்க பார்க்­கின்­றனர். என்னை மன­த­ளவில் வீழ்த்தி அர­சி­யலில் இருந்தும் என்னை நம்­பி­யுள்ள மக்­க­ளிடம் இருந்தும் ஒதுக்கி வைக்க இவர்கள் அனை­வரும் முயற்­சிக்­கின்­றனர். எவ்­வாறு இருந்­தாலும் எனது குடும்­பமும் எனது விசு­வா­சி­க­ளுமே எனக்கு உள்ள மிகப்­பெ­ரிய பலம். அதை எப்­போதும் நான் இழக்க மாட்டேன்.
கேள்வி:- புதிய அர­சியல் கட்சி ஒன்றை உரு­வாக்­கு­வது தொடர்பில் கதைக்­கின்­றனர். இத னால் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மிகப்­பெ­ரிய பின்­ன­டைவை அடை­யு­மல்­லவா?
பதில்:- அவ்­வாறு எதுவும் நடக்­காது. அவ்­வாறு கட்சி இரண்­டானால் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் அனை­வரும் புதிய அணியில் இணைந்­து­கொள்­வார்கள். இப்­போது கட்சி செல்லும் நிலையில் நான் அவ்­வாறு நினை­கின்றேன். ஏனெனில் மக்கள் எந்­தப்­பக்கம் உள்­ள­னரோ அந்­தப்­ பக்கம் தான் மக்­க ளின் பிர­தி­நி­தி­களும் இருக்க வேண்டும். மக்கள் இல்­லாது கட்­சியை உரு­வாக்­கவும் முடி­யாது, மக்­களின் ஆத­ரவு இல்­லாது கட்­சி­யாக செயற்­ப­டவும் முடி­யாது. ஆகவே அவ்­வா­றான நிலையில் பிர­தி­நி­திகள் சரி­யான முடி­வு­களை எடுக்க வேண்டும்.
கேள்வி:- அவ்­வாறு உரு­வானால் நீங்கள் புதிய அணிக்கு ஆத­ரவை வழங்­கு­வீர்­களா?
பதில்:- நான் இப்­போதும் அவர்­க­ளுடன் தான் உள்ளேன்.
கேள்வி:- அப்­ப­டி­யாயின் நீங்கள் புதிய கட்­சிக்கு செல்லத் தயாரா?
பதில்:- புதிய கட்­சியை பற்றி நான் கதைக்­க­வில்லை. ஆனால் நான் செல்லும் இட­மெல்லாம் மக்கள் புதிய அணி­யொன்றை எதிர்­பார்க்­கின்­றனர்.அதைப்­பற்றி கதைக்­கின்­றனர். ஆகவே அதற்­கான தேவை ஒன்று ஏற்­பட்­டுள்­ள­து­என நான் நம்­பு­கின்றேன். அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை மக்கள் முழு­மை­யாக வெறுக்­கின்­றனர். அவ் ­வா­றான நிலையில் மாற்றம் அவ­சி­ய­மா­னதே. அதையும் நான் நம்­பு­கின்றேன்.
கேள்வி:- ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உங்­களை ஆத­ரிக்­கின்­றதா?
பதில் :- என்னை முதலில் கட்­சியை விட்டு வெளியில் தள்­ளி­ய­வர்கள் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யினர் தான். ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் நிரா­க­ரிக்க முன்னர் ஸ்ரீலங்கா காரர்கள் என்னை நிரா­க­ரித்து விட்­டனர். அவர்கள் என்னை வேண்டாம் என கூறும்­போது மக்கள் என்னை ஆத­ரிக்­கின்­றனர். ஆகவே நான் மக்கள் பக்கம் இருப்­பதே சரி­யா­னது. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி என்ற பதா­தையை மாத்­திரம் வைத்­து­கொண்டு எதையும் செய்ய முடி­யாது. கட்­சிக்கு என்ற கொள்கை ஒன்று அவ­சியம். அதன் கொள்­கையை அழித்­து­விட்டு எம்மால் இருக்க முடி­யாது.
கேள்வி:- உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை நடத்­து­வது தொடர்பில் உங்­களின் நிலைப்­பாடு?
பதில்:- நல்ல விடயம், காலத்தை கடத்­தாது உட­ன­டி­யாக தேர்­தலை வைக்க வேண்டும். மீண்டும் பிர­தேச சபை­களை பலப்­ப­டுத்த வேண்டும். கண்­முன்னே அனை­வரும் அழி­வதை எம்மால் பார்த்­துக்­கொண்டு இருக்க முடி­யாது.
கேள்வி:- கட்­சியின் கீழ்­மட்ட உறுப்­பி­னர்கள் புதிய அணியை எதி­பார்ப்­ப­தாக கூறு­கின்­றனர். இது தொடர்பில் உங்­களின் கருத்து என்ன?
பதில்:- உண்­மையில் அதுதான் இன்­றைய தேவை­யாக உள்­ளது. புதிய அணியை உரு­வாக்க விமலும்,உதய கம்­மன்­பி­லவும் முயற் ­சிப்­ப­தாக கூறு­கின்­றனர். இது முழு­மை­யான பொய். அவர்­களை அவ்­வாறு தூண்­டு­வதே ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் கீழ்­மட்ட உறுப்­பி­னர்கள் தான். பிர­தேச சபை, உள்­ளூ­ராட்சி சபை, மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள் அனை­வ­ரி­னதும் அழுத்தம் இவர்­களின் வாய்­களில் வெளி­வ­ரு­கின்­றது. அதை தவ­றாக ஒரு­சிலர் காட்­சிப்­ப­டுத்தி இன்று ஊட­ கங்­க­ளிலும் அவ்­வாறு காட்­சிப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. விம­லுக்கோ, டலஸ், கம்­மன்­பி­ல­வுக்கோ கட்­சியை பிரிக்க வேண்­டிய தேவை இல்லை.
கேள்வி:- தாமரை மொட்டு சின்­னத்தில் புதிய அணியை உரு­வாக்­கு­வது என்ற கதைகள் எந்­த­ளவு உண்மை?
பதில்:- நீங்கள் தான் அவ்­வாறு ஒவ்­வொரு சின்னங்­களை கூறு­கின்­றீர்கள். நீங்கள் தான் ஒவ்­வொரு எண்­ணங்­களை எனது மன தில் பதிக்­கின்­றீர்கள். தாமரை மொட்டு சின்­னமா, ரோஜா மொட்டு சின்­னமா என நாங் கள் தீர்­மா­னிக்க வேண்­டிய நிலைக்கு நீங்கள் தான் எங்­களை கொண்­டு­வந்­துள்­ளீர்கள். இறு­தியில் நாங்கள் அவ்­வாறு தான் செல்­ல­வேண்டி உள்­ளது.
கேள்வி:- பொது எதி­ரணி உரு­வா­காதா?
பதில்:- நாங்கள் அவ்­வாறு நினைக்­க­வி ல்லை, என்னை எப்­ப­டி­யேனும் பிரிக்­கவே பார்க்­கின்­றீர்கள். அப்­படி என்றால் நான் புதிய கட்­சியை உரு­வாக்க வேண்­டிய நிலைமை வந்தே தீரும். அவ்­வாறு நான் புதி­தாக கட்­சியை உரு­வாக்­கு­வ­தாக இருந்தால் நிச்­ச­ய­மாக தெரி­விப்பேன். அது­வ­ரையில் என்­னிடம் இந்த கேள்­வியை கேட்க வேண்டாம்.
கேள்வி:- தமிழில் தேசிய கீதம் இயற்­று­வதை எதிர்ப்­பது ஏன்?
பதில்:- நான் தமிழை எதிர்க்­க­வில்லை, எதிர்க்­க­ வேண்­டிய அவ­சி­யமும் இல்லை. நான் கூறி­யதை தவ­ றாக பொருள்­ப­டுத்த வேண்டாம். இலங் ­கையின் அரச நிகழ்­வு­களில், முக்­கிய வைப­வங்­களில் தமிழில் இயற்ற அவ­சி­ய­மில்லை. சிங்­கள மொழியும் பெளத்த கொள்­கை யும் வெளிப்­பட் டால் மாத்­திரம் போது­மா­னது. இன்று தமிழில் இயற்ற கேட்­பார் கள், இன்னும் சிலபேர் நாளை உருது மொழி­யிலோ அல்­லது அரே­பிய மொழி­யிலோ தேசிய கீதம் இயற்ற அனுமதிக்க வேண்டும் என்று போராட ஆரம்பிப்பார்கள். அவ்வாறு சென்றால் இறுதியில் இந்த நாடும் எமது கொள்கையும் எங்கே போவது.
கேள்வி:- உங்களின் இந்த தோல்விக்கு தமி ழர் தரப்பு தான் காரணம் என்ற கருத்தில் இப் போதும் உள்ளீர்களா?
பதில்:- நான் அவ்வாறு கூறியதில்லை, இப்போதும் அவ்வாறன நிலையில் நான் இல்லை. இந்த நாட்டையும் மக்களையும் நான் நேசிக்கின்றேன்.
கேள்வி:- எதிர்க்கட்சி தொடர்பில் உங்களின் நிலைப்பாடு?
பதில்:- நாங்கள் தான் இப்போது எதிர்க்கட்சி. நாங்கள் தான் இந்த நாட்டில் நல்லது கேட் டது தொடர்பில் கதைக்கின்றோம். அதை தவிர நாட்டை பிரிக்கும் நபர்களை நாங்கள் எதிரணியாக கருதப்போவதில்லை.

Post a Comment

0 Comments