Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கடும் காற்றினால் புத்தளத்தில் 46 வீடுகள் சேதம்

பிற்பகல் புத்தளம் பிரதேசத்தில் வீசிய கடும் காற்றினால் 46 வீடுகள் சேதமடைந்துள்ளன.
புத்தளம் முள்ளிபுரம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள  46 வீடுகளே  சேதமடைந்ததாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
மக்கள் புரம் , இல்யாஸ் தோட்டம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலேயே கடும் காற்று வீசியுள்ளது .
கடும் காற்றினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அதிகாரிகளை குறித்த பகுதிக்கு அனுப்பிவைத்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments