Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

புதிய அரசியல் சாசனத்திற்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்: கோரிக்கை விடுக்கிறார் சம்பந்தன்

“நாட்டில் ஒரு புதுப்பாதையை உருவாக்குவதற்காய் புதிய அரசியல் சாசனத்திற்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்” எனவும் அது ஒவ்வொருவரின் கடமை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
திருகோணமலை ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றபோதே அவர் இதனைக் கூறினார்.
நாடு சுபீட்சமடைய வேண்டுமானால் நாட்டில் வாழும் அனைத்து மக்களினதும் சம்மதத்துடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானது என வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திலேயே தமிழ் மக்களின் எதிர்காலம் தங்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

Post a Comment

0 Comments