Advertisement

Responsive Advertisement

லொறி மோதியதில் பெண்ணொருவர் பலி:

நுவரெலியா நகரத்தில் இருந்து கண்டி நோக்கி சென்ற லொறி ஒன்று, பெண் ஒருவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அப்பெண் உயிரிழந்துள்ளார்.
31 வயது மதிக்கதக்க வரதராஜ் சந்திரகலா என்ற பெண், நுவரெலியா லபுக்கலை தோட்டத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து வெதமுல்லை கடை ஒன்றுக்கு சென்ற போதே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று பிற்பகல் 3 மணிக்கு இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார், லொறியின் சாரதியை கைது செய்துள்ளதுடன் சம்பவ இடத்தில்
இருந்து லொறியை அகற்றவிடாமல் அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை உருவாக்கியிருந்தது.
பொலிஸாரின் தலையீட்டின் பின் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றுள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொத்மலை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments