Home » » ஜனவரியில் அமைச்சரவையில் அதிரடி மாற்றம்: மகிந்த அணியினர் நால்வருக்கு அமைச்சர் பதவி

ஜனவரியில் அமைச்சரவையில் அதிரடி மாற்றம்: மகிந்த அணியினர் நால்வருக்கு அமைச்சர் பதவி

அமைச்சரவை வரும் ஜனவரி மாத முற்பகுதியில் மாற்றியமைக்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.தே.கவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து கூட்டு அரசா ங்கத்தை அமைத்து நான்கு மாத ங்களாகியுள்ள நிலையில், இந்த திடீர் அமைச்சரவை மாற்றம் இடம் பெறவுள்ளதாக உயர்மட்ட அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை மாற்றம் குறித்து ஜனாதிபதியும், பிரதமரும் கவனம் செலுத்தியுள்ளதாகவும், இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, மிகவும் செல்வாக்குள்ள அமைச்சர் ஒருவர் பதவி இழப்பார் என்றும் கூறப்படுகிறது.
அதேவேளை மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியில் இடம்பெற்றிருந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாம் மகிந்த அணியில் இருந்து விலகப் போவது குறித்து இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்சவிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |