Home » » நாடாளுமன்றத்தின் ஊடகவியலாளர் சங்கத்திற்கு இரண்டு தமிழர்கள் தெரிவு

நாடாளுமன்றத்தின் ஊடகவியலாளர் சங்கத்திற்கு இரண்டு தமிழர்கள் தெரிவு

இலங்கை நாடாளுமன்றத்தின் ஊடகவியலாளர் சங்கத்தின் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் இடம்பெற்ற பொதுக்குழுக் கூட்டத்தின் போது இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கினங்க தலைவராக லசந்த வீரகுலசூரிய (லக்பிம) தெரிவுசெய்யப்பட்டுள்ள அதேவேளை பி. கிருபாகரன் (தினக்குரல்) பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செயலாளராக டில்ஷான் தொடங்கொட (டி.வி. தெரண) நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் பிரதிச் செயலாளராக சமன் இந்திரஜித் ( த அய்லன்ட்) நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை பொருளாளராக அஷ்வின் ஹெம்மாத்தகம (டெய்லி எப்.டி) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை இந்த சங்கத்தின் உறுப்பினர்களாக தயா பெரேரா (மவ்பிம), சிறிபால் வன்னியாராச்சி (சிரச டிவி), பத்மா வேரகொட ஆராச்சி (இதிரி லங்கா), சுராஜ் அல்விஸ் (வி.எப்எம்), மதுஷான் டி சில்வா ( சுவர்ணவாஹினி), ஆரியரத்ன ரணபாகு (லங்காதீப), சிந்தக்க பண்டார (ரூபவாஹினி கூட்டுத்தாபனம்), துஷார வீரரத்ன (பொலிடிக் வெப்) மற்றும் நிரோத காரியவசம் (ஹிரு எப்.எம்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் அநுர தோரகும்புர (சுயாதீன ரூபவாஹினி), ககனி வீரகோன் (சிலோன் டுடே), சமீர எல்தெனிய (தினமின), ஆர். சனத் (சுடரொலி), பிரபாத் ரத்நாயக்க ( அரசாங்க தகவல் திணைக்களம்), உதித குமாரசிஙக (சண்டே ஒப்சவர்), சமந்த குமார (நெத் எப்.எம்), ருச்சிர டிலன் மதுசங்க (ரிவிர) உள்ளிட்டவர்களும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |