Advertisement

Responsive Advertisement

கைதிகள் விடுவிக்கப்பட்டால் ஜனாதிபதி மாளிகை முற்றுகை: ராவண பலய எச்சரிக்கை

தமிழ் அரசியல் கைதிகளை அரசாங்கம் விடுதலை செய்யுமானால் ஜனாதிபதி செயலகம் முற்றுகை இடப்படும் என்று ராவண பலய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் சிலர் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறித்து எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள மகஜர் ஒன்றிலேயே இந்த எச்சரிக்கையை ராவண பலய விடுத்துள்ளது.
அரசியல் கைதிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் செயற்பட ஆரம்பித்துவிடும் எனவும் ராவண பலய அமைப்பு அச்சம் வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் இது குறித்து கலந்துரையாட நேற்று வருகை தருமாறு ராவனா பலய அமைப்பிற்கு ஜனாதிபதி கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாட்டிற்கு ஜனாதிபதி சென்றிருப்பதால் நேற்றைய சந்திப்பு இரத்து செய்யப்பட்ட போதிலும், ராவண பலய அமைப்பு ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்று ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது.
இதனையடுத்து உரையாற்றிய அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர், இந்த விடயத்தில் ஜனாதிபதி உரிய பதிலை அளிக்காவிட்டால் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிடப் போவதாக எச்சரிக்கை விடுத்தார்.

Post a Comment

0 Comments