Home » » வடகிழக்கு பருவகாற்றால் பல இடங்களில் மழை பெய்யும்

வடகிழக்கு பருவகாற்றால் பல இடங்களில் மழை பெய்யும்

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இன்று வடகிழக்கு பருவக்காற்றின் தாக்கம் அதிகரித்து காணப்படலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் வட வடமத்திய கிழக்கு ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகமாகவே காணப்படுகிறது எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மேல் சப்ரகமுவ மத்திய மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் மழை பெய்யலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இம்மழைவீழ்ச்சியினளவு 100 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. கிழக்கு கடலோரங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகிறது எனவும் மின்னல் அபாயங்களும் ஏற்படக்கூடுமெனவும் அதனால் பொதுமக்கள் அனைவரையும் மிகவும் அவதானத்துடன் இருக்கும் படி வானிலை அவதான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |