ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் – 2015 மாநாடு இன்று பிரான்சின் பாரீஸ் நகரில் ஆரம்பமாகவுள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றையதினம் பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளார்.
இந்த மாநாடானது டிசம்பர் 11ம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்-கீ-மூன் உள்ளிட்ட 147 நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றவுள்ளனர்.
0 Comments