Home » » கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்களினால் மீரியபெத்த மண்சரிவின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்களினால் மீரியபெத்த மண்சரிவின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

மீரியபெத்த மண்சரிவின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்களினால் பல்கலைக் கழக கலை கலாசார பீட கட்டடத் தொகுதியில் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.
 மறைந்தவர்களின் மழை விழி சாந்தி பெறவும், மரணத்துயிரினால் மலைத்து நிற்கும் குடும்பம் மனக் கவலை நீங்கி நிம்மதி வெற்றிடவும், மரணித்தவர்களின் ஆத்மா சாந்தி பெறவும் பிராத்திக்கின்றோம் என மீரியபெத்த மக்களுக்கான முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியும், அக வணக்க நினைவுச் சுடரும் ஏற்றப்பட்டது.
 நடைபெற்ற நினைஞ்சலி நிகழ்வுக்கு கிழக்கு பல்கலைக் கழக விரிவுரையாளரும், சிரேஸ்ட மாணவ ஆலோசகருமான மு.ரவி மற்றும் ஏனைய விரிவுரையாளர்களும், மாணவர்களும் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி தீபம் ஏற்றி அக வணக்கத்தை செலுத்தினர்.
   

   

   

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |