உலக வெப்பமடைதலால் ஏற்படுகின்ற கடல் நீர் மட்ட அதிகரிப்பை தடுக்க முடியாது என்று நாசா எச்சரித்துள்ளது.
சில வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம், உலக வெப்பமடைதால் கடல் நீர் மட்டம் 1 தொடக்கம் 3 அடிகள் வரையில் உயரும் என்று எதிர்வு கூறப்பட்டிருந்தது.
எனினும் நாசாவின் புதிய ஆய்வின் படி, இதனிலும் பார்க்க அதிக அளவில் நீர் மட்டம் உயரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பிரதானமாக மூன்று காரணங்கள் கூறப்படுகின்றன.
சமுத்திரங்களின் நீரின் வெப்பநிலை உயர், பனிப்பாறைகளின் உருக்கம் மற்றும் க்ரீன்லாந்து, அன்டார்ட்டிகா போன்ற பகுதிகளில் உள்ள பனிநிலம் உருக ஆரம்பித்துள்ளமை போன்றக் காரணங்களால் கடல் மட்டம் வேகமாக அதிகரிக்கிறது.
இதனால் உலகெங்கும் கடலோரமாக வாழ்கின்ற சுமார் 150 மில்லியன் மக்கள் ஏதோ ஒரு வழியில் பாதிக்கப்படுவார் என்றும் நாசா எச்சரித்துள்ளது.
பாதிக்கப்படப்போக்கும் நாடுகள் இதோ:
0 comments: