தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து இதுவரை இறுதி முடிவு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவரை மேற்கோள் காட்டியே இத் தகவல் வெளியிட்டுள்ளது.
இத் தகவலின் பிரகாரம் கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சர்கள் தொடர்பான பட்டியல் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களின் இணக்கப்பாட்டுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ளும் அதே நேரம் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் கைப்பற்றத் திட்டமிடும் சுதந்திரக் கட்சிக்கு எதிராக ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன போர்க்கொடி தூக்கியுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சுதந்திரக் கட்சி பெற்றுக் கொள்ளும் பட்சத்தில் அதற்கு எதிராக வெளிநாட்டுத் தூதுவர்களிடம் முறைப்பாடுகளை மேற்கொள்ளவும் ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன தீர்மானித்துள்ளன.
0 comments: