Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பாகிஸ்­தா­ன் இரா­ணுவ தள­பதி இலங்­கைக்கு விஜயம்

பாகிஸ்­தா­ன் இரா­ணுவ தள­பதி மேஜர் ஜெனரல் ராஹில் செரிப் நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு நேற்­றைய தினம் இலங்­கைக்கு வரு­கை­தந்­துள்ளார்.
இலங்கை இரா­ணுவ தள­பதி மேஜர் ஜெனரல் ஏ.டபிள்யூ.ஜே.சி. டி சில்­வாவின் அழைப்பின் பேரி­லேயே இவ்­வி­ஜயத்தை மேற்­கொண்­டுள்ளார்.
இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ள பாகிஸ்­தா­னிய இரா­ணுவத் தள­பதியை இரா­ணுவ தள­பதி லெப்­ரினன்ட் ஜெனரல் ஏ.டபிள்யூ.ஜே.சி. டி சில்வா மற்றும் பாகிஸ்­தா­னிய உயர்ஸ்­தா­னிகர் மேஜர் ஜெனரல் (ஓ) சையட் சகில் ஹுசைன் மற்றும் பாது­காப்பு தூதுவர் முஹம்மட் ராஜில் இர்ஸாட் காஹன் ஆகி­யோர் பண்­டார நாயக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தில் வைத்து வர­வேற்றனர்.
நான்கு நாட்கள் தங்­கி­யி­ருக்கும் இவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க மற்றும் பாது­காப்பு உயர் அதி­கா­ரி­களை சந்­திக்­க­வுள்ளார். இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான இரு தரப்பு உற­வுகள் மேம்­பட இவ்­வி­ஜயம் சிறந்த சந்­தர்ப்­ப­மாக அமையும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. 15ஆவது பாகிஸ்­தா­னிய இரா­ணுவ தள­ப­தி­யாக மேஜர் ஜெனரல் ராஹில் செரிப் கடந்த 2013 ஆண்­டி­லி­ருந்து கட­மை­யாற்றி வரு­கின்றார். 1976 இல் உரு­வாக்­கப்­பட்ட 6ஆவது படையணியின் முன்னணி வீரராக மேஜர் ஜெனரல் ராஹில் செரிப் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments