Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ரணி­லுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லா பிரே­ர­ணை­­ ­செ­ய­லா­ள­ரி­டம் சமர்ப்­பிப்­பு

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் 112 பேரின் கையெ­ழுத்­துக்­க­ளுடன் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை பாரா­ளு­மன்ற செய­லாளர் நாயகம்
தம்­மிக்க தச­நா­யக்­க­வி­டம் நேற்­று சமர்ப்­பிக்­கப்­பட்­டது.
ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பங்­காளிக் கட்­சி­களின் பிர­தி­நி­திகள் 7 பேர் இந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கைய­ளித்­துள்­ளனர்.
ஐ.ம.சு.மு.வின் எம்.பிக்­க­ளான பந்­துல குண­
வர்த்­த­ன, ­ம­னுஷ நாண­யக்­கா­ர,­ ரஞ்சித் சொய்­ஸா,­­ ஜ­னக வக்­கும்­ப­ர,­ வீர­கு­மார திஸா­
நா­யக்­க,­ வை.ஏ.பத்­ம­சிறி ஆகி­யோரே நேற்
றைய தினம் பாரா­ளுமன்ற கட்­டடத் ­தொ­கு­தி யில் செயலாளர் தம்­மிக்க தச­நா­யக்­க­விடம் பிரே­ர­ணையை சமர்ப்­பித்­துள்­ள­னர்.
ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் பங்­காளிக் கட்­சி­களின் பிர­தி­நி­திகள் இந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ ணையை சமர்ப்­பிக்கும் செயற்­பாட்டை மேற் ­கொண்­ட­து­டன் 112பாரா­ளு­மன்ற உறுப்­பி­
னர்களின் கையெ­ழுத்­துக்­க­ளையும் பெற்­றுள்
ள­னர். நம்­பிக்­கை­யில்லாப் பிரேரணையை தயா­ரித்து 112 பேரின் கையொப்பங்­களைப் பெற்ற ஐ.ம.சு.மு.வினர் நேற்­றைய தினம் எதிர்க்­கட்சி தலை­வர் அலு­வ­ல­கத்­தில் இடம் ­பெற்ற ஆலோ­சனைக் கூட்­டத்தின் பின்­னரே
பாரா­ளு­மன்ற செய­லா­ள­ரிடம் பிரே­ர­ணையை
கைய­ளித்­து­ள்­ள­னர்.
இதே­வேளை நேற்று முன்­தினம் சபா­நா­யகர் சமல் ராஜ­ப­க் ஷவை சந்­தித்த
மஹிந்த ஆத­ரவு அணி­யினர் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கைளிப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டனர்.
நேற்று முன்­தினம் அம்­பாந்­தோட்­டைக்கு சென்ற ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கட்­சியின் பங்­காளிக் கட்­சி­களின் பிர­தி­நி­தி­க­ளான தினேஷ் குண­வர்­தன, வாசு­தேவ நாண­யக்­கார, திஸ்ஸ விதா­ரண மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளான பந்­துல குண­வர்­தன ஆகியோர் இவ்­வாறு சமல் ராஜ­ப­க்ஷவை சந்­தித்து பேசி­யுள்­ளனர்.
எதிர்­வரும் பாரா­ளு­மன்ற அமர்வில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக நம்­பிக்கை இல்லா பிரே­ர­ணை­யை­கொண்­டு­வந்து விவாதம் நடத்­து­வ­தற்கு ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி முயற்­சி­களை மேற்­கொண்­டுள்­ளது. மஹிந்த ஆத­ரவு அணி­யி­னரே இந்த செயற்­பாட்டில் மும்­மு­ர­மாக செயற்­பட்­டு­வ­ரு­கின்­றனர்.
எனினும் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை சிங்­கள மொழியில் மட்­டுமே சமர்ப்­பிக்­கப்­பட்­டதால் தமிழ் மற்றும் ஆங்­கில மொழி­களில் மொழி­பெ­யர்க்­க­வேண்­டிய தேவை காணப்­ப­டு­கின்­றது.
எனவே உட­ன­டி­யாக பிரே­ர­ணையை பாரா­ளு­மன்ற ஒழுங்குப் புத்­த­கத்தில் உள்­ள­டக்­கு­வதில் சிக்­கல்கள் காணப்­ப­டு­கின்­றன.
எவ்­வா­றெ­னினும் அனைத்து செயற்­ப­டு­களை மேற்­கொண்டு விரை­வில் விவாத்­திற்கு கொண்­டு­வ­ரவே ஐ.ம.சு.மு.முயற்­சிக்­கின்­ற­து.
இது தொடர்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­தன தெரி­விக்­கையில்,
மக்­களின் ஆத­ரவு இல்­லாத அர­சாங்கம் இன்று ஆட்சி நடத்தி வரு­கின்­றது. பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை பலம் எம்­மிடம் இருக்­கின்ற நிலையில் பெரும்­பான்மை இல்­லாத ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்சி நடத்­து­வதை ஒரு போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.
அதேபோல் மத்­திய வங்கி ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன் விட­யத்தில் அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் திருப்­தி­ய­ளிக்­க­வில்லை. பக்­கச்­சார்­பான வகையில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­பா­டுகள் அமைந்­துள்­ளன. இந்த அர­சாங்கம் முழு­மை­யாக பழி­வாங்கல் அர­சி­யலை மட்­டுமே செய்து வரு­கின்­றது. இதை நாம் உட­ன­டி­யாக கட்­டுப்­ப­டுத்த வேண்டும். ஆகவே ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கட்­சியின் 113 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஒன்­றி­ணைத்து பிர­தமர் ரணி­லுக்கு எதி­ரான நம்­பிக்கை இல்லா பிரே­ர­ணையை கொண்­டு­வந்­துள்ளோம்.
இப்­போதே 113 பேர் நம்­பிக்கை இல்லா பிரே­ர­ணையில் கைச்­சாத்­திட்­டுள்­ளனர். அதேபோல் நேற்று இரவு (நேற்று முன்­தினம்) ஹம்­பாந்­தோட்­டையில் சபா­நா­ய­கரை சந்­தித்து இந்த பிரே­ர­ணையை சமர்ப்­பிப்­ப­தற்­கான அனு­ம­தியை பெற்­றுள்ளோம். அதற்கு அமைய நேற்று பாரா­ளு­மன்ற செய­லாளர் நாயகம் தம்­மிக்க தச­நா­யக்­க­விடம் பிரே­ர­ணையை கைய­ளித்­துள்ளோம்.
ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவையும் பெறுவதற்கான பேச்சுவார்த்தையை எதிர்வரும் தினங்களில் மேற்கொள்ளவுள்ளோம். எனவே எதிர்வரும் பாராளுமன்ற கூட்டம் 9ஆம் திகதி கூடவுள்ளது. அன்றைய தினம் கட்சித் தலைவர்கள் கூட்டம் கூடி இறுதி முடிவை எடுப்போம். பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணையை விரைவாக விவாதத்துக்கு எடுப்பதே எமது முதல் நோக்கமாகும் என்றார்.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ்ய நாணயக்கார தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில் எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று (நேற்று) பிற்பகல் 1 மணி அளவில் விசேட சந்திப்பு ஒன்றை மேற்கொண்டோம். இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களான பந்துல குணவர்தன, ரஞ்சித் சொய்சா, ஜானக வத்கும்புற, வீரவன்ச திசாநாயக்க, பத்மசிறி, ஹிஸ்புல்ல உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதனையடுத்து பிற்பகல் 2.30 மணி அளவில் நாம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் இந்த பிரே­ர­ணையை சமர்ப்பித்துள்ளோம். எனினும் நாம் முன்வைத்த பிரேரணை சிங்கள மொழியில் மாத்திரம் இருப்பதன் காரணத்தினால் இவ் பிரே­ர­ணை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பின்னர் அதை பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் உள்ளடக்கப்படும். எவ்வாறிருப்பினும் எதிர்வரும் 8ஆம் திகதி பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கட்சித் தலைவர்கள் கூட்டம் கூடவுள்ளது. இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒட்டுமொத்த தீர்மானத்தையும் எம்மால் பெற்றுக்கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களினால் சபாநாயகருக்கு கையளிக்கப்பட்டுள்ள பிரேரணையில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது,
பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவு இல்லாது ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்துள்ளது.
நாட்டின் பாரிய அளவிலான அபிவிருத்தி திட்டங்களை இடை நிறுத்­தப்­பட்­டுள்­ளன. இதனால் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்புகளின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் கட்டளைச் சட்டமூலத்தை மீறும் வகையில் அரசியல் பழிவாங்கல்களுக்காக பொலிஸ் திணைக்களம் அரசியல் மயப்படுத்தப்­பட்­டுள்­ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை, இலங்கையின் பிரஜை இல்லாத ஒருவரை மத்திய வங்கி ஆளுநராக நியமித்தமை, இலங்கை மதிய வங்கியில் வரலாற்றில் இடம்பெறாத அளவு மோசடிகள் தற்போது இடம்பெற்றுள்ளமை, நாட்டுக்கு எதிரான பிரச்சினைகளின் போது உதவிய சர்வதே நாடுகளுடன் புரிந்துணர்வுடன் செயற்படாது சர்வதேச புரிந்துணர்வை சீர்குலைத்தமை, தனியார் பிரிவுகள் செயலிழக்கும் வகையில் அரச நாணயக் கொள்கையை அமுல்ப்படுத்தியமை. போன்­ற காரணங்களினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கை அற்றுப் போயுள்ளது. எனவே இக் காரணங்களை முன்வைத்து பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டுவருகின்­றோம்.

Post a Comment

0 Comments