Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

யோகேஸ்­வரன் இரா­ச­குமாரருக்கு கடூழிய சிறைத்தண்டனை

சட்­ட­வி­ரோ­த­மாக 6 கஞ்சா பீடிக்­கட்­டுக்­களை வைத்­தி­ருந்த பருத்­தித்­துறை கற்­கோ­வளம் புனித நகரைச் சேர்ந்த யோகேஸ்­வரன் இரா­ச­குமார் என்ற குடும்­பஸ்­த­ருக்கு பருத்­தித்­துறை நீதிவான் நீதி­மன்றம் 7 மாதக் கடூ­ழியச் சிறைத்­தண்­ட­னையும் 10 ஆயிரம் ரூபா அப­ரா­தமும் விதித்து நேற்று தீர்ப்­ப­ளித்­தது.
இர­க­சியத் தக­வலின் அடிப்­ப­டையில் கடந்த 4ஆம் திகதி மாலை பருத்­தித்­துறை பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்ட குறித்த நபர் மீது பொலிஸார் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்து பருத்­தித்­துறை நீதிவான் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தி­னார்கள்.
குற்றம் சாட்­டப்­பட்­டவர் தனது மனைவி பிள்­ளை­களைப் பயன்­ப­டுத்தி கஞ்சா விற்­பனை செய்து வந்­த­துடன் அதனை மாண­வர்கள் மத்­தி­யிலும் அறி­முகம் செய்து விற்று வந்­துள்ளார். இதன் கார­ண­மாக அவ­ரது குடும்­பத்­தினர் மன­த­ள­விலும் உட­ல­ள­விலும் வெகு­வாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர் என பொலிஸார் சமர்ப்­பித்த குற்றப் பத்­தி­ரி­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இவ்­வ­ழக்கை விசா­ர­ணைக்கு எடுத்துக் கொண்ட பருத்­தித்­துறை மாவட்ட நீதி­பதி மாணிக்­க­வா­சகர் கணே­ச­ராசா எதிரிக்கு எச்சரிக்கையுடன் 7 மாத கடூழிய சிறைத்தண்டனையும் 10ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Post a Comment

0 Comments