Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கண்டி,கொழும்பு பிர­தான வீதியில் விபத்­து; மூன்று பேர் உயி­ரி­ழப்­பு

கண்டி – - கொழும்பு பிர­தான வீதியில் நேற்று
இடம்­பெற்ற வாகன விபத்தில் மூவர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் இருவர் படு­கா­ய­ம­டைந்­துள்­ளனர்.
பாதையின் நடுவில் இருந்த பாத­சா­ரிகள் இரு­வரை காப்­பாற்ற டிப்பர் வண்டி சார­தி­பாதையின் வலது புறத்தே வாக­னத்தை திருப்­பிய போது அவ்­வி­ரு­வ­ரையும் மோதி­ய­வாறே எதிர்த்­தி­சையில் வந்த லொறி­
யொன்­றுடன் மோதுண்­டு இந்த விபத்து சம்­ப­வித்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.
சம்­ப­வத்தின் போது பாத­சா­ரி­க­ளான பொத்­
து­ஹர பிர­தே­சத்தைச் சேர்ந்த 38 வய­து­டைய
சம்பத் காமல் பண்­டார – 25 வய­து­டைய தரிந்துதசுன் தென்­னக்கோன் ஆகி­யோரும் லொறியின் சார­தி­யான பன்­வில பிர­தே­சத்தை சேர்ந்த 38 வய­து­டைய சந்­தன பிர­சன்ன ஆகி­யோரே உயி­ரி­ழந்­துள்­ளனர்.
டிப்பர் வண்­டியின் சாரதி லொறியின் உத­வி­யாளர் ஆகியோர் பலத்த காயங்­க­ளுடன் கேகாலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.
இச்­சம்­பவம் தொடர்பில் மேலும் அறிய முடி­வ­தா­வது.
நேற்று அதி­காலை 4.30 மணி­ய­ளவில் கொழும்பு - கண்டி பிர­தான வீதியில் கேகாலை பொலிஸ் பிரிவின் ரன்­வல எனும் இடத்தில் பாத­சா­ரிகள் இருவர் பாதையைக் கடந்­துள்­ள­னர். அவர்கள் இரு­வரும் நடு வீதியை அடைந்த போது கொழும்பு பிர­தே­சத்­தி­லி­ருந்து கேகாலை நோக்கி டிப்பர் வண்­டி­யொன்றே வேக­மாக வந்­துள்­ளது.
பாதையின் நடுவில் இருந்த பாத­சா­ரி­களை காக்கும் நோக்கில் டிப்பர் வண்­டியின் சாரதி வண்­டியை வலது புற­மாக செலுத்­தி­யுள்ளார். எனினும் பாதை நடுவில் இருந்த பாத­சா­ரிகள் இரு­வரும் டிப்பர் வண்­டியில் மோதுண்­டுள்­ள­துடன் டிப்பர் வண்­டி­யா­னது அதனை தொடர்ந்து கொழும்பு நோக்கி எதிர்த்­தி­சையில் வந்த லொறி­யுடன் மோதி­யுள்­ளது. இதன் கார­ண­மா­கவே விபத்து சம்­ப­வித்து மூவர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
டிப்பர் வண்டி சாரதி வைத்தியசாலையில் உள்ள நிலையில் அவரை கைது செய்துள்ள கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments