மகிந்த ஆட்சிக்காலத்தில் திவிநெகும நிதியத்தின் பாரிய பணத்தொகை ராஜபக்ச சார்பில் நடாத்திச்செல்லப்பட்ட பல பத்திரிகைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில் ராஜபக்சவின் கீழ் செயற்பட்ட திவிநெகுமவின் நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து நிதிமோசடி விசேட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விசாரணகளின் போது நிதி நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருந்த ராஜபக்ச சார்பு பத்திரிகைகளுக்கு உதவ திவிநெகும நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி குற்றப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது குறித்து குறிப்பிட்ட பத்திரிகைகளின் உரிமையாளர்கள் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளதாக விசேட பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
ராஜபக்ச சார்பு பத்திரிகைகளின் உரிமையாளர்கள் சிலர் தற்போது வெளிநாடுகளில் வசித்து வருவதாகவும்,
அவர்கள் பத்திரிகை உலகில் ராஜபக்ச குடும்பத்தின் பொம்மைகளாக செயற்பட்டனர்.
இதற்கான ஆதாரங்கள் காணப்பட்ட போதிலும் இந்த பணப்பரிமாற்றங்கள் மர்மமான முறையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் நிதி குற்றப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.


0 Comments