Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தைரியம் இருந்தால் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்துங்கள் மஹிந்த ஆதரவு அணி அரசாங்கத்திற்கு சவால்

உள்­ளூ­ராட்சி சபையின் ஆட்­சிக்­கா­லத்தை நீடித்து தைரியம் இருந்தால் பாரா­ளு­மன்­றத்தை கலைத்து பொதுத்­தேர்­தலை நடத்­து­மாறு அர­சாங்­கத்­திற்கு சவால்­விடும் மஹிந்த ஆத­ரவு அணி. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் பிர­தமர் மஹிந்த ராஜ­பக்­ ஷவின் ஆட்­சியை ஏற்­ப­டுத்தும் போராட்டம் தொட­ரு­மென்றும் அறி­வித்­தது.
நாரா­ஹேன்­பிட்­டி­யி­லுள்ள அபே­ராம விஹா­ரையில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற வாசு, தினேஷ், விமல் மற்றும் உதய கம்­மன்­பில ஆகி­யோரின் மஹிந்த ஆத­ரவு அணியின் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டது.
இங்கு உரை­யாற்­றிய தினேஷ் குண­வர்த்­தன எம்.பி. எதிர்­வரும் மே 15 ஆம் திகதி உள்­ளூ­ராட்சி சபை­களின் ஆட்­சிக்­காலம் நிறை­வ­டை­கின்­றது. எனவே அனைத்து உள்­ளூ­ராட்­சி­ச­பை­க­ளி­னதும் ஆட்­சிக்­காலம் முடி­வ­டைந்­த­வுடன் ஒரே தினத்தில் புதிய தேர்தல் முறை­மைக்கு தேர்தல் நடத்­து­மாறு அர­சிடம் பாரா­ளு­மன்­றத்தில் கோரிக்கை முன்­வைத்தோம்.
அமைச்சர் கரு­ஜ­ய­சூ­ரிய இதனை ஏற்­றுக்­கொண்டார். ஆனால் இன்று இந்த உறுதி மொழியை மீறி அரசு அச்­சு­றுத்தல் விடுக்கும் விதத்தில் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலை நடத்­த­வுள்­ளது. இதனை கண்­டிக்­கின்றோம். எதிர்­வரும் செப்­டெம்பர் மாதத்­திற்கு பின்னர் எல்லை நிர்­ண­யங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல்கள் நடத்­தப்­பட வேண்டும். அர­சாங்கம் 100 நாள் திட்­டத்தை முன்­வைத்தே மக்கள் ஆத­ரவை பெற்­றனர். 100 நாள் தாண்­டி­விட்­டது. எனவே ஆட்­சியை தொடர்­வ­தற்கு இந்த அர­சாங்­கத்­திற்கு தார்­மீகக் கடப்­பாடு கிடை­யாது. எனவே தைரி­ய­மி­ருந்தால் பாரா­ளு­மன்­றத்தை கலைத்து பொதுத் தேர்­தலை நடத்த வேண்டும். சிறு­பான்மை அர­சுக்கு தொடர்ந்தும் ஆட்­சி­யி­லி­ருக்க முடி­யாது. இது அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யா­கவும் சட்ட ரீதி­யா­கவும் பிழை. சிறு­பான்மை அர­சாங்கம் என்­பதை பிர­தமர் ரணிலே ஏற்­றுக்­கொண்­டுள்ளார்.
எனவே மேலும் காலத்தை கடத்­தக்­கூ­டாது என்றும் தினேஷ் குண­வர்த்­தன எம்.பி தெரி­வித்தார்.
வாசு­தேவ நாண­யக்­கார எம்.பி
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் மஹிந்த ராஜ­பக்­ ஷவை பிர­த­ம­ராக்கும் எமது போராட் டம் தொடரும்.
சிறு­பான்­மை­யான இந்த ஐ.தே.கட்சி அரசை வீட்­டுக்கு அனுப்­பு­வதே எமது முதற்­க­ட­மை­யாகும். இன்று இடம்­பெறும் கூட்­டத்தில் மக்கள் இதனை வலி­யு­றுத்­து­வார்கள் என்று இங்கு கருத்து தெரிவித்த வாசு­தேவ நாண­யக்­கார எம்.பி கூறினார்.
விமல் வீர­வன்ச எம்.பி
அரசின் அடக்கு முறைக்கு நாம்
அடிபணிய மாட்டோம். சிறைச்சா
லைகளை காண்பித்து ஜனநாயகத் திற்கான எமது போராட்டத்தை தடுத்து விட முடியாது என்று இங்கு கருத்து தெரிவித்த விமல் வீரவன்ச எம்.பி. கூறினார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தனவும் கலந்து கொண்டார்.

Post a Comment

0 Comments