Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்­டக்­க­ளப்பு கல்­லடிப் பாலத்தில் குதித்து ஒருவர் தற்­கொலை

இறந்­தவர் எனது சகோ­தரர். மனைவி மக்களுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டார். அதற்­காக
 குடிப்­ப­ழக்­கத்­தையும் கைவிட்டார்.
இவ்­வாறு திருந்­தி­ய­துடன் மட்டும் நில்­லாது ஆலய வழி­பா­டு­க­ளிலும் விரதம் அனுஷ்­டிப்­ப­திலும் ஈடு­பட்­ட­ரா­யினும் மனைவி மக்கள் அவரை ஏற்­க­வில்லை. இந்த மன விரக்­தியின் கார­ண­மா­கவே அவர் தற்­கொலை செய்­துள்ளார்."


இவ்­வாறு மட்­டக்­க­ளப்பு வாவியில் கல்­லடிப் பாலத்தில் இருந்து குதித்து
 தற்­கொலை செய்து கொண்ட ஜி.விசித்­தி­ரக்­குமார் (வயது 40) என்­ப­வரின் மரண விசா­ர­ணையில் சாட்­சி­ய­ம­ளித்த அவரின் சகோ­த­ரி­யான திரு­மதி
குண­வதி தர்­ம­ராசா கூறினார்.

இவரின் மரண விசா­ரணை மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில் காத்தான்குடி வடக்கு திடீர் மரண விசா­ரணை அதி­காரி ச.கணே­ச­தா­ஸினால் செய்­யப்­பட்­டது. அப்­போது இறந்­த­வரின்
மனை­வி­யான சசி­கலா கூறி­ய­தா­வது,

"கணவர் கல்­லடி புது முகத்­து­வா­ரத்தைச் சேர்ந்­தவர் நான் கிரான் கிரா­மத்தைச் சேர்ந்­தவர். நாங்கள் இரு­வரும் காத­லித்து 2001ஆம் ஆண்டிர் திரு­மணம் செய்து கொண்டோம். எமக்கு 13,11 வய­து­களில் இரு பெண் பிள்­ளை­களும் 6 வயதில் மகனும் உள்­ளனர். 2010ஆம் ஆண்டு வேலைக்­காக சவூ­திக்குச் சென்­றவர் 2012ஆம் ஆண்டு வரை காசு அனுப்­பினார்.  பின்னர் பணமும் அனுப்­ப­வில்லை. எம்­முடன் எது­வித தொடர்பும் கொள்­ள­வில்லை.

கடந்த வருடம் நவம்பர் மாதம் வீட்­டிற்கு வந்தார். அவர் காணப்­பட்ட கோலம் எனக்குப் பிடிக்­க­வில்லை. நீண்ட தலை முடியும் தாடியும் வளர்த்­தி­ருந்­த­துடன் மதுப்­ப­ழக்­கத்­திற்கும் அடி­மை­யா­கி­யி­ருந்தார்.
 இதனால் நான் அவரை ஏற்­க­வில்லை. பின்னர் அவரின் அக்­கா­வுடன் வசித்து வந்தார். இடை­யி­டையே கிரா­னுக்கு வருவார்.ஆனால் நான் சந்­திப்­ப­தில்லை. பாட­சா­லையில் பிள்­ளை­க­ளையும் சந்­திக்க விட வேண்டாம் என சொல்லி வைத்தேன். ஐந்து நாட்­க­ளுக்கு முன் வீட்­டிற்கு சென்றார். அந்த நேரம் நான் வீட்டில் இருக்­க­வில்லை.

பின் எனது சித்­தியின் வீட்­டுக்குச் சென்று நான் திருந்தி விட்­ட­தா­கவும் சேர்ந்து வாழ விரும்­பு­வ­தா­கவும் கூறி­யுள்ளார். 10 நாட்­களில் சேர்த்து வைப்­ப­தாக சித்தி கூறி உணவும் கொடுத்­துள்ளார். பின்னர் அவர் சென்று விட்டார்.
இவற்­றை­யெல்லாம் என் சித்தி மூலம் நான் அறிந்தேன்.
அதன் பின்னர் கல்­லடிப் பாலத்தில் குதித்து தற்­கொலை செய்து கொண்டார் என அறிந்தேன்."

இவ்­வாறு அவர் தனது சாட்­சி­யத்தில் கூறினார்.
பிரேத பரி­சோ­தனை செய்த சட்ட வைத்­தியர் எம்.ஏ.தாஹிர், நீரில்
மூழ்­கி­யதால் மரணம் ஏற்­பட்­ட­தாக அறிக்கை சமர்ப்பித்தார்.

குடும்பத்தகராறு காரணமாக மனம் வருந்தி செய்த தற்கொலை மரணம் என்று மரண விசாரணை அதிகாரி ச.கணேசதாஸ் தீர்ப்பு வழங்கியதுடன் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக் குமாறு கட்டளையிட்டார்.

Post a Comment

0 Comments