Home » » புங்குடுதீவை விட்டு வெளியேறும் வித்தியாவின் குடும்பம்

புங்குடுதீவை விட்டு வெளியேறும் வித்தியாவின் குடும்பம்

புங்குடுதீவில் வன்கொடுமையின் பின் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் குடும்பத்தினர், அந்தப் பகுதியை விட்டு வெளியேறிச் செல்லவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக மாணவி வித்தியா சிவலோகநாதனின் குடும்பத்தினர், அந்தப் பகுதியை விட்டு வெளியேறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமது பாதுகாப்புக் கருதி, வவுனியாவில் தனது உறவினர்களுடன் குடியேறவுள்ளதாக, வித்தியாவின் தாய் சரஸ்வதி சிவலோகநாதன் தெரிவித்துள்ளார்.
தனது மகளின் படுகொலைக்குக் காரணமான சந்தேக நபர்களின் குடும்பத்தினர், புங்குடுதீவில் தமது வீட்டுக்கு அருகே வசிக்கின்ற நிலையிலேயே, அச்சம் காரணமாக தாம், அங்கிருந்து வெளியேறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வித்தியாவின் 45வது நாள் இறுதி சமயக் கிரியைகள் முடிந்தவுடன், புங்குடுதீவை விட்டு உடனடியாகவே வெளியேறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |