Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

புதுவருத்துக்கு தாய் வாங்கிக் கொடுத்த ஆடைகளை பகிர்வதில் மோதல்! அண்ணன் பலி: தம்பி கைது!

முல்லைத்தீவில் இரு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதுவருடத்திற்காக தாய் வாங்கிக் கொடுத்த ஆடைகளை பகிர்ந்து
கொள்வதில் மகன்மார்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 19 வயதுடைய மூத்த சகோதரர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் முல்லைத்தீவு முள்ளியவளை, தண்ணீரூற்று பகுதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் நடத்திய இளைய சகோதரர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் முல்லைத்தீவு நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments