Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஆசிரியை கொலையில் திடீர் திடுக்கிடும் திருப்புமுனை..! போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைவு (பதறவைக்கும் வீடியோ)

கடந்த ஒரு வாரமாக வாட்ஸ்ஆப்-ல் உலா வந்த ஆசிரியர், மாணவரின் செய்திகள் மற்றும் படங்கள் தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அதில் தற்பொழுது ஒரு புது திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரையை சேர்ந்தவர் கேசரி மகள் கோதைலட்சுமி என்ற பிரியா (23). எம்எஸ்சி படித்துள்ள இவர், தென்காசி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இப்பள்ளியில் கடையநல்லூரைச் சேர்ந்த 15 வயது மாணவர் 10ம் வகுப்பு படித்து வந்தார்.  
கடந்த சில மாதங்களாக அந்த ஆசிரியையும், மாணவனும் நெருங்கிப் பழகியுள்ளனர். ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 31ம் தேதி திடீரென இருவரும் அவரவர் வீடுகளில் இருந்து மாயமாகி விட்டனர்.
இதில் இருவரது காதல் விவகாரம் குறித்து பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.
கோதைலட்சுமி மாணவனோடு காதல் வயப்பட்டதால், விதவிதமான போட்டோக்களை எடுத்து வைத்துள்ளார். மேலும் மாணவனின் அழகில் மயங்கி அவரோடு அடிக்கடி பேசி கொண்டிருந்ததோடு, அவரை அழைத்து கொண்டு பல்வேறு இடங்களுக்கு சென்றதால் பள்ளி நிர்வாகம் அவரை எச்சரித்துள்ளது. அதை இருவரும் கண்டு கொள்ளாததால் சில தினங்களுக்கு முன்பு கோதைலட்சுமியை பணியில் இருந்து பள்ளி நிர்வாகம் நீக்கியது. ஆனால், பள்ளி நிர்வாகம் இதுகுறித்த தகவல்களை மாணவனின் பெற்றோருக்கு தெரியப்படுத்தவில்லை என கூறப்படுகிறது.
மாணவனின் தந்தை வெளிமாநிலத்தில் வேலை பார்க்கும் சூழலில், தனது மகனின் நடத்தை பற்றிய தகவல்கள் அவருக்கு போய் சேரவில்லை. இந்நிலையில் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டாலும், மாணவனுடனான நட்பை ஆசிரியை கோதை லட்சுமி தொடர்ந்த வண்ணம் இருந்துள்ளார்.
மாணவன் 10ம் வகுப்பு தேர்வுகளை முழுமையாக எழுதி முடிக்கும் வரை இருவரும் காத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இரண்டு தேர்வுகள் மட்டுமே எழுதி முடித்த நிலையில், உறவினர்கள் நெருக்கடி காரணமாக மாயமாகி விட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிகழ்வுகளால் இருவரது குடும்பத்தினரும், அவர்களது உறவினர்களும் தற்போது தவிப்பில் உள்ளனர். இதுகுறித்து புகார் அளித்த மாணவர் குடும்பத்தினர் தற்போது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டதாக தெரிகிறது.
இதற்கிடையில், மாணவரும், ஆசிரியையும் சென்னை அருகே கும்மி டிப்பூண்டியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அய்யப்பன் தலைமையிலான தனிப்படையினர் மாயமான மாணவரை தேடிஅங்கு விரைந்துள்ளனர்.
பள்ளி மாணவன் ஆசிரியையோடு மாயமான இந்த சம்பவம் குறித்து பல்வேறு வதந்திகள் வாட்ஸ் அப்பில் பரவியது.
முதல் நாள் சம்பந்தமில்லாத இருவரது படங்கள் மாணவன், டீச்சர் எனக்கூறி தமிழகம் முழுவதும் உலா வந்தன. அந்த படங்களை தமிழ் பத்திரிக்கைகளும் வெளியிட்டன. அந்த படங்களை பார்த்து பலர் உண்மை என நம்பினர். அதன் தொடர்ச்சியாக நேற்று மாணவனையும், ஆசிரியையையும் வெட்டிக்கொலை செய்துவிட்டதாக ஒரு பெட்டியினுள் அடைக்கப்பட்டது போல் படம் வெளியாயின.
ஆனால், அந்த புகைப்படத்தில் கொலை செய்யப்பட்டுள்ளது  ஹரியானாவைச் சேர்ந்த ஒரு இளம்ஜோடிகளாம். சோனிபட் அருகில் உள்ள பூங்காவில் சென்ற வாரம் ஜோடிகள் இருவரும் கொலை செய்யப்பட்டு இரண்டு பெட்டிக்குள் அடைக்கப்பட்ட நிலையில் அவர்களின் சடலத்தை விட்டுசென்றுள்ளனர் கொலையாளிகள். அவர்கள் இருவரும் புதுமணத்தம்பதிகள் வீட்டில் உள்ளவர்களுக்கு பிடிக்காமல் கவுரவக்கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் அவர்கள் யார்? யார் அவர்களை கொன்றார்கள் என்பது குறித்து இன்னும் எந்த தகவலும் வெளிவரவில்லை.
மேலும், வாட்ஸ் ஆப்-ல் கடையநல்லூர் ஆசிரியை, மாணவனும் சேர்ந்த மாதிரியான புகைப்படங்கள் படுக்கையறை காட்சி  வீடியோ நேற்றுமுன்தினம் வெளிவந்தது. அந்த வீடியோவில் இருப்பது கார்நாடகா மாநிலம் மங்களூருவை சேர்ந்த ஆசிரியை என தெரியவந்துள்ளது. அந்த ஆசிரியைக்கும் மாணவனுக்கும் இடையே ஏற்பட்ட தகாத உறவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சக மாணவர்களால் வாட்ஸ்ஆப்பில் பரவியுள்ளது.
அந்த புகைப்படங்கள் வாட்ஸ்ஆப்பில் பரவிக்கொண்டிருக்கும் போதே, கடையநல்லூர் ஆசிரியையும், மாணவனும் காணமல் போனதால் அவர்கள் தான் இவர்கள் என யாரோ சில விஷமிகள் படங்களை மாற்றியிணைத்து வாட்ஸ்ஆப்பில் பரப்பி விட்டுள்ளனர். மாணவனின் பிற்கால வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால் முதலில் போலீசார் புகைப்படங்களை வெளியிட மறுத்துவிட்டனர். போலியான புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளிவந்த பின்னர், வேறு வழியின்றி அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இருப்பினும் மாணவனின் புகைப்படம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
கீழே ஹரியானாவில் நடந்த இரட்டை கவுரவக் கொலைசம்பவ வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments