Home » » பொன்.செல்வராசா எம்பியின் வாகனத்தில் மோதி காயமடைந்தவர் பலி

பொன்.செல்வராசா எம்பியின் வாகனத்தில் மோதி காயமடைந்தவர் பலி

மட்டக்களப்பு –கல்முனை பிரதான வீதியில் பாராளுமன்ற உறுப்டபினர் பொன்.செல்வராசாவின் வாகனத்தில் மோதுண்டு படுகாயமடைந்தவர் மரணமானதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
நேற்று  பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இவர்  படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இறந்தவர் வாகரை பிரதேசத்தைச் சேர்ந்த நல்லதம்பி கணேசலிங்கம் (62) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கல்லடி, உப்போடை சிவானந்தா வித்தியாலயத்துக்கு அருகில் உள்ள குறுக்கு வீதியில் இருந்து பிரதான வீதியை குறுக்கறுத்துச்செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிளின் மீது, மட்டக்களப்பில் இருந்து ஆரையம்பதி சென்ற பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவின் வான் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது படுகாயமடைந்தவர் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். எனினும் சிகிச்சைக்குப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.




Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |