இச்சம்பவமானது இன்று (12.03.2015) காலை 7.15 மணியளவில் பெரிய நீலாவணை பிரதான வீதியில் இடம்பெற்றது. இச்சம்பவம் கல்முனை இருந்து வாழைச்சேனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டியும் அதே திசையில் பயணித்துக் கொண்டிருந்த வடி ரக வாகனமுமம் சாரதிகளின் கவலையீனம் காரணமாக விபத்துக்குள்ளானது. இவ்விபத்துச் சம்பவத்தின் போது பாரிய சேதனங்கள் ஏற்பட வில்லையாயினும் வாகனங்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments