Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு சிறுவர்கள் காயம்

இன்று பிற்பகல் 11.30மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் கூழாவடி முதலாம் குறுக்கினை சேர்ந்த இரண்டு சிறுவர்களே காயமடைந்தாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி பகுதியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இரண்டு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.

கூழாவடி முதலாம் குறுக்கு வீதியில் இருந்து கூழாவடி பிரதான வீதிக்கு துவிச்சக்கர வண்டியில் வந்த இரண்டு சிறுவர்களை பிரதான வந்த மோட்டார் சைக்கிள் மோட்டார் சைக்கிள் மோதியதாகவும் இதன்போது துவிச்சக்கர வண்டியில் வந்த இரண்டு சிறுவர்களும் காயமடைந்ததாகவும் அதில் ஒருவருக்கு சிறு காயங்கள் எனவும் காயமடைந்தவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்

Post a Comment

0 Comments