ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வரும் சந்தர்ப்பத்தில், தேர்தல்கள் ஆணையாளராகிய நானோ அல்லது பிரதம நீதியரசரோ அலரி மாளிகையில் இருக்கக் கூடாது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் வேட்பாளரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தங்கியிருந்த அலரி மாளிகைக்கு நானும் பிரதம நீதியரசரும் செல்லக் கூடாது.
தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் போது, அரசாங்க அதிகாரிகளான தாமும் பிரதம நீதியரசரும் தேர்தலில் போட்டியிட்ட ஒரு வேட்பாளரின் வீட்டில் இருப்பது, தொழில் ஒழுக்க விதிகளுக்கு முரணானது என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தினமன்று இரவு பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அலரி மாளிகையில் தங்கியிருந்தமை குறித்து, சிங்கள ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே தேர்தல்கள் ஆணையாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
0 comments: