Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு வாழைச்சேனையில் பொலிசாரால் ஐந்து கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது


வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் விற்பனைக்காக கொண்டு சென்ற கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களும், முச்சக்கர வண்டி ஒன்றும் வெள்ளிக்கழமை இரவு கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.


வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கஞ்சா வியாபாரம் இடம் பெருவதை குறைக்கும் வகையில் வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஓ.எஸ்.விதானகேவின் வழிகாட்டலில் விஷேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் கும்புறுமூலை பிரதேசத்தில் வைத்து சந்தேகத்திற்கு இடமான வாகனங்களை பரிசோதனை செய்யும் போதே முச்சக்கர வண்டியில் ஏறாவூர் பகுதியில் இருந்து வாழைச்சேனை பிறைந்துரைச்சேனைக்கு கொண்டுவரப்பட்ட ஐந்து கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், அந்த கஞ்சாவை கொண்டு வந்த பெண் ஒருவரும், முச்சக்கர வண்டி சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த கஞ்சா வியாபாரத்துடன் குறித்த பெண்னுடன் வேரு எவர்களும் தொடர்பு பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.




Post a Comment

0 Comments