வாகனங்களை ஏற்றிச்சென்ற பாரிய கப்பலொன்று இங்கி லாந்தின் சௌதம்ப்டன் கடற்பகுதியில் நேற்று முன்தினம் கவிழ்ந்துள்ளது.
ஹொயே ஒசாகா எனும் இக்கப்பல் 180 மீற்றர் (சுமார் 590 அடி) நீளமானதாகும்.
சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட இக்கப்பல் இங்கிலாந்தின் சௌதம்ப்டனிலிருந்து ஜேர்மனியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது நேற்று முன்தினம் இரவு கவிழ்ந்தது.
அக்கப்பலில் இருந்த 25 ஊழியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலைக்கு அழைத் துச் செல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு வகையான வாகனங்களை ஏற்றிச்சென்ற இக்கப்பல் 45 பாகையில் கவிழ்ந்தது.
இக்கப்பலை மீண்டும் நிமிர்த்தி மிதக்க வைப்பதற்கான நடவடிக்கைகள் நேற்று ஆரம்பமாகின.
0 Comments