அக்கரைப்பற்றிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் மீது இனந்தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தச்சம்பவம் இன்று இரவு 9.50 மணியளவில் மிஹிந்தலையில் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலில் பஸ் சாரதி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தை அடுத்து அந்தப்பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை அடுத்து அந்தப்பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments