Home » » புதிய ஆட்­சியின் கீழ் கிழக்கின் கல்வி நிர்­வா­கத்தில் நல்­லாட்சி மலர வேண்டும்

புதிய ஆட்­சியின் கீழ் கிழக்கின் கல்வி நிர்­வா­கத்தில் நல்­லாட்சி மலர வேண்டும்

கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள கல்வி வல­யங்­களில் சில நடை­மு­றைகள் வல­யத்­திற்கு வலயம் வேறு­பட்ட முறை­களில் பின்­பற்­றப்­பட்டு வரு­வ­தாக ஆசி­ரி­யர்கள் முறை­யிட்டு வரு­கின்­றனர். இதனால் ஆசி­ரி­யர்­க­ளி­டையே ஏற்­றத்­தாழ்வு ஏற்­ப­டு­வ­துடன் பாதிக்­கப்­பட்டும் வரு­கி­றார்கள். எனவே புதிய ஆட்­சியில் அவற்றை சீர்­ப­டுத்­து­மாறு வேண்­டு­கின்றோம்.
என கிழக்கு மாகாண கல்­விப்­ப­ணிப்­பாளர் எம்.ரி.ஏ. நிஸா­மிடம் இலங்­கைத்­த­மிழர் ஆசி­ரியர் சங்கம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. இவ்­வி­டயம் குறித்து கல்விப் பணிப்­பா­ள­ருக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
ஆசி­ரி­யர்­க­ளுக்­கான சம்­பள உயர்ச்சி வழங்­கு­வ­தற்கு நிரப்­பப்­படும் விண்­ணப்பப் படி­வங்கள் வல­யத்­திற்கு வலயம் வேறு­பட்­டுள்­ளன. சில வல­யங்­களில் உழைத்­துப்­பெறும் இச் சம்­பள உயர்ச்­சியைப் பெற பல­ரது சிபா­ரி­சையும் அங்­கீ­கா­ரத்­தையும் பெற வேண்­டி­யி­ருப்­ப­தாக முறை­யி­டப்­பட்­டுள்­ளது. பல வல­யங்­களில் ஆசி­ரி­யர்கள் தமது சம்­பள உயர்ச்­சியை கேட்டு பெற வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலை உள்­ளது. ஆசி­ரி­யர்கள் தமது சம்­பள நிலு­வை­களைப் பெறு­வ­தென்­பது முயற்­கொம்­பா­க­வுள்­ளது. இதனைப் பெற அலு­வ­லகம் நோக்கி அலைய வேண்­டி­யுள்­ளது. இதனால் பல மாதங்கள் தாம­த­மாகி வரு­கி­றது.
ஒரு சில இடங்­களில் கையூட்டு வழங்க வேண்­டி­யி­ருப்­ப­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது. வல­யத்­திற்­குள்­ளான வல­யத்­திற்கு வெளி­யே­யான இட­மாற்­றங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் இன்­னமும் வேறு­பாடு இருக்­கின்­றது.
பாட­சா­லை­களில் அதிபர் வெற்­றிடம் ஏற்­படும் போது சில வல­யங்­களில் விண்­ணப்பம் கோரப்­பட்டு தகு­தி­யா­ன­வ­ருக்கு வழங்­கப்­ப­டு­கி­றது. இன்னும் சில வல­யங்­களில் விண்­ணப்­பமே கோரப்­ப­டாமல் தகு­தி­யற்­ற­வர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கி­றது. குறிப்­பிட்ட ஒரே வல­யத்­தி­னுள்ளும் இம்­மு­ரண்­பாடு உள்­ளது. கிழக்­கி­லுள்ள 17 கல்வி வல­யங்­களில் சம்­மாந்­துறை வல­யத்தில் மட்டும் அதிபர் வெற்­றி­டத்தை நிரப்ப விசேட விண்­ணப்பம் கோரப்­பட்­டுள்­ளது. இது முறை­யற்ற செயற்­பா­டாகும். உத­விக்­கல்விப் பணிப்­பாளர் மற்றும் ஆசி­ரிய ஆலோ­சகர் நிய­ம­னங்­களின் போதும் சீரான நடை­முறை பின்­பற்­றப்­பட வேண்டும்.
பொது­மக்கள் சந்­திப்பு தின­மான புதன்­கி­ழ­மை­களில் வல­யங்­களில் அதி­கா­ரி­களைச் சந்­திக்கச் செல்­கின்ற போது அவர்கள் அன்­றைய தினம் அலு­வ­ல­கக்­கூட்­டத்தை நடத்திக் கொண்­டி­ருப்­பதால் மக்­க­ளுக்கோ ஆசி­ரி­யர்­க­ளுக்கோ உரி­ய­வர்­களைச் சந்­திக்க முடி­வ­தில்லை. சில வல­யங்­களில் இது நடை­மு­றை­யி­லுள்­ளது. கிழக்கில் சகல வல­யங்­க­ளிலும் ஒரே நாளை அலு­வ­லக நாளாக பிர­க­ட­னப்­ப­டுத்த வேண்டும். சில­வேளை மாகாண பணி­ம­னை­களில் கூட இந்­நிலை நில­வு­கி­றது. அவை எதிர்­கா­லத்தில் தவிர்க்­கப்­பட வேண்டும்.
இலங்கை கல்வி நிரு­வாக சேவை அதி­கா­ரிகள் ஒரு ஸ்தானத்தில் 5 வரு­டங்­க­ளுக்கு பணி­யாற்­றலாம் என்­பது நியதி. ஆனால் ஒரு அதி­காரி மட்டும் 10 வரு­டங்கள் கடந்தும் ஒரே வல­யத்தில் கட­மை­யாற்­று­வதை அனு­ம­திக்­க­லாமா? மாண­வர்­க­ளுக்­கான போட்­டிகள் தொடர்பில் தொடர்ந்து பிரச்­சி­னைகள் எழுந்த வண்­ணமே உள்­ளன. பல வல­யங்­களில் போட்டி நடை­பெறும் தினம், இடம் என்­பன முன் கூட்­டியே அறி­விக்­கப்­ப­டு­வ­தில்லை. முதல்­நா­ளி­ரவு அறி­விக்­கப்­படும் நடை­முறை மாறி வரு­கி­றது. மாகாண தேசிய போட்­டி­களில் வெற்­றி­யீட்டும் மாண­வர்­க­ளுக்­கான சான்­றி­தழ்­களை உரிய காலத்தில் பெற்றுக் கொடுக்க வேண்டும். பெற்றோர் தலை­யிட்டு வரு­டத்தின் பின் பெற வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலை­யு­முள்­ளது. கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் 2014 ஆம் ஆண்டுக்கான வருடாந்த வலய மற்றும் மாகாணங்களுக்கிடையிலான ஆசிரியர் இடமாற்றத்திற்கான விண்ணப்பங்களை கல்வியமைச்சின் 2007.20 ஆம் இலக்க சுற்று நிருபத்திற்கமைவாக தேவையான ஆசிரியர்களிடமிருந்து கோரியுள்ளது. அதனை சகல வலயத்திலும் சீராக நீதியாக அமுல்படுத்த உதவ வேண்டும். புதிய வருடத்தில் புதிய ஆட்சியிலாவது இவற்றைச் சீர்செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |