Advertisement

Responsive Advertisement

நீதியான தேர்தலை எதிர்பார்க்கிறார் ஐ.நா பொதுச்செயலாளர்!

இலங்கையில் அமைதியான, நீதியான தேர்தல் ஒன்று குறித்து ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் மிகுந்த எதிர்ப்பார்ப்பை வெளியிட்டுள்ளார். இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ்சுடன் கடந்த வாரம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பான் கீ மூன், இலங்கையின் நல்லிணக்கத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை என்றும் துணையிருக்கும் என்று உறுதியளித்துள்ளார்.
இதன்போது பதிலளித்த அமைச்சர் பீரிஸ், இலங்கையின் அனைத்து வாக்காளர்களும் பங்கேற்கும் வகையில் தேர்தல் நடத்தப்படுவதாக குறிப்பிட்டார். அத்துடன், சிறுபான்மையினரும் பயமின்றி வாக்களிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பீரிஸ் தெரிவித்தார் என்றும் சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments