Home » » பழங்களில் ஏராளமான பயன்கள் உள்ளன. பழங்கள் சாப்பிடுவதால் நமது உடலில் ஏற்படும் நோய்களுக்கும் தீர்வு உள்ளது. அதுபற்றிய விபரம்

பழங்களில் ஏராளமான பயன்கள் உள்ளன. பழங்கள் சாப்பிடுவதால் நமது உடலில் ஏற்படும் நோய்களுக்கும் தீர்வு உள்ளது. அதுபற்றிய விபரம்


கொய்யா பழம்
* கொய்யா பழத்தில் வைட்டமின் ‘சி’ உயிர்ச்சத்து அதிக அளவில் உள்ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் ‘சி’ உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது. எனவே கொய்யாபழத்தை சிறுவர்கள் சாப்பிடலாம்.
* மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பயன் கிடைக்கும்.
* சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாபழம் சாப்பிட்டு வர நோய் குணமடையும்.
மாம்பழம்
* மாம்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை சாப்பிட்டால் உடலில் ரத்தம் அதிகமாகி உடலுக்கு பலம் கிடைக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.
பப்பாளி
* வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. குறைந்த விலையில் கிடைக்கும். வீடுகளிலும் எளிதாக வளர்க்கக்கூடியது. இந்த பழத்திலும் வைட்டமின் ‘ஏ’ உயிர்ச்சத்து நிறைய உள்ளது.
* பல் சம்பந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி பழம் அருமருந்தாக பயன்படுகிறது.
* நரம்புகள் வலுவடையவும், ஆண்மைத்தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும் பப்பாளி சாப்பிடலாம்.
* மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்கள் தினமும் பப்பாளிப்பழம் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்.
அன்னாசிபழம்
அன்னாசி பழத்தில் வைட்டமின் ‘பி’ உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. உடலில் ரத்தத்தை விருத்தி செய்யும். உடலுக்கு பலத்தை தரும். பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது.
* நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக கட்செய்து வெய்யிலில் தூசிபடாமல் உலர்த்தி வற்றல்களாக செய்ய வேண்டும். பின்னர் இதை தினமும் படுக்கைக்கு செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இவ்வாறு செய்தால் பித்தம் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும்.
* அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.
மாதுளம் பழம்
* இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப் பிட்டு வந்தால் குணமாகும்.
* பித்த சம்பந்தமான அனைத்து உடல்நல குறைபாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வாழைப்பழம்
* மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றைச் சாப்பிட்டு வந்தால் இந்நோய்களில் இருந்து விடுபடலாம்.
* தினமும் இரவு உணவிற்குப்பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும்.
* எந்த வயதினராக இருந்தாலும், கண் பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும்.
* திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத பெண்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தரிக்க வாய்ப்பு ஏற்படும்.
ஆரஞ்சு
* ஆரஞ்சில் வைட்டமின் ஏ, பி2 அதிகமாக உள்ளது. இதில் சுண்ணாம்புசத்தும் மிகுந்து காணப்படுகிறது. இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும்.
* பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல் ஈறுகளில் ரத்தக் கசிவு இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்கினால் பலன் கிடைக்கும்.
திராட்சை
* எல்லா வகையான திராட்சையிலும் வைட்டமின் ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும். சரியாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலை யில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சை சாறு அரை டம்ளர் எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து குடித்து வரலாம்.
பேரீச்சை
*தினமும் இரவில் படுக்க செல்லும் முன் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். மேலும் புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும்.
* கண் சம்பந்தமான கோளாறுகளும், நரம்பு சம்பந்தமான கோளாறுகளும் நீங்கும்.
எலுமிச்சை
* கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்துச் சாற்றை உறிஞ்சினால் போதும்.
* நெஞ்சில் கபம் கட்டி இருமலால் கஷ்டப்படுபவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் சிறிது தேன் கலந்து காலை, மாலை தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
* தலைவலி இருப்பவர்கள் சூடான 1 கப் காபியில் அரை எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து 3 நாட்கள் குடித்து வந்தால் பிறகு தலைவலியே வராது.
* எலுமிச்சை பழத்தை இரண்டாக பிளந்து ஒரு பாதியை தேள் கொட்டிய இடத்தில் நன்றாகத் தேய்க்க வேண்டும். இவ்வாறு இரண்டு துண்டுகளையும் தேய்த்துவிட்டால் சிறிது நேரத்திற்கெல்லாம் விஷம் இறங்கி வலி நின்றுவிடும்.
* எலுமிச்சம் பழத்தை அடிக்கடி உபயோகித்து வருபவர்களுக்கு உஷ்ண அதிகரிப்பால் உண்டாகும் வயிற்று வலி, பித்தத்தால் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகள், உஷ்ணத்தால் ஏற்படும் சிறுநீர் தொந்தரவுகள், மலச்சிக்கல், உஷ்ண இருமல் ஆகிய தொந்தரவுகள் வராது.பழங்களை சாப்பிடுவோம்... நோயின்றி வாழ்வோம்!

வாயு தொல்லையை தடுக்க குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம்

  • எழுத்தாளர்: Editor
குழந்தைகளின் சருமம் மிகவும் மிருதுவானது. கொஞ்சமாக சிராய்த்தாலே போதும், அது மோசமான வலியையும், எரிச்சலையும் ஏற்படுத்தி குழந்தையை பாதிக்கும்.
குழந்தைகளுக்கு பயன்படுத்தும் அனைத்து துணிகளையும், மெல்லிய சோப்பு கொண்டு துவைத்தல், மிதமான வெந்நீரில் குளிக்க வைத்தல், தோல் சம்பந்தமான தரமான பொருட்களை உபயோகித்தல் ஆகியவை மூலம் குழந்தைகளின் சரும பிரச்னைகளை தீர்க்கலாம். மேலும் பிறந்த குழந்தைகளுக்கு அடிக்கடி எண்ணெய் மசாஜ் செய்வதும் சிறந்தது. இது குழந்தையின் தோலுக்கு நல்லது மட்டுமல்லாமல், நன்றாக தூங்கவும் உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள்
பால் பருக்கள்: பால் பருக்களும் குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான பாதிப்புதான். இதற்காக எந்த சிகிச்சையும் மேற்கொள்ள தேவையில்லை. ஒரு சில நாட்களில் அது தானாகவே மறைந்துவிடும்.பிறப்பு தழும்புகள்: பிறப்பு தழும்புகள் என்பது பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படுவதுதான். குழந்தைகள் பிறக்கும்போது ஏற்படும் இந்த தழும்புகள், சில வாரங்களில் தானாகவே மறைந்துவிடும்.தோல் தடிப்பு: தோல் தடிப்பு என்பது குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்த சம்பந்தமான ஒரு பாதிப்பாகும். குடும்பத்தில் யாருக்காவது ஆஸ்துமா, அலர்ஜி என இருந்தால் அது குழந்தையை பாதிக்கும். முகம், முழங்கை, மார்பு அல்லது தோள்பட்டைகளில் இந்த பாதிப்பு ஏற்படும். இவ்வாறு ஏற்பட்டால் மிகவும் நமச்சல் இருக்கும்.

வறண்ட தோல்: பெரும்பாலான குழந்தைகள் பிறக்கும்போதே வறண்ட தோலுடன் காணப்படும். பிறந்த சில நாட்களில் அவை அப்படியே உரிந்து, மறைந்து விடும். இதனால் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.வியர்வை பாதிப்பு: கழுத்து, அக்குள் பகுதிகளில் ஏற்படும் வியர்வை காரணமாக இளஞ்சிவப்பு நிறத்தில் சருமத்தில் திட்டுத்திட்டாக வரும். எனவே வியர்வை வராமல் பார்த்து கொள்வது அவசியம். இந்த வியர்வை வராமல் தடுக்க 6மாதங்கள் வரை இறுக்கமான உடைகளையோ அல்லது அதிகம் பவுடர் போடுவதையோ தவிர்க்க வேண்டும்.எண்ணெய் சுரப்பிகள்குழந்தைகளின் தோலில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அடைபடும்போது, சில இடங்களில் வெள்ளை வெள்ளையாகத் திட்டுக்கள் தோன்றும். ஒரு சில நாட்களில் அந்தச் சுரப்பிகள் திறந்து கொள்ள, திட்டுக்கள் மறைந்து போகும்.ஈஸ்ட் தொற்று: குழந்தைகளுக்கு சில சமயங்களில் ஈஸ்ட் தொற்று ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு மருந்துகளை கொடுக்கும் போது வாய்ப்பகுதிகளில் இது ஏற்படும்.விக்கலால் வேதனை: குழந்தைகளுக்கு விக்கல் எடுக்கும்போது அவர்களது உடலே ஒருவித ஆட்டத்தை ஏற்படுத்தும். அதைப்பார்த்தால், அம்மாக்களுக்கு பயமாக இருக்கும். தடுப்பது எப்படி?

* தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தை அதிகப்படியான காற்றை விழுங்குகிறது. இதனால் அடிக்கடி விக்கல் ஏற்படுகிறது. எனவே குழந்தைகள் அதிகப்படியான காற்றை விழுங்காமல் இருப்பதற்கு, பால் கொடுக்கும் நேரத்தில் அவ்வப்போது ஒரே பக்கத்தில் கொடுக்காமல், அடிக்கடி நிலையை மாற்றிக் கொண்டே இருந்தால், குழந்தைகள் அதிகமான காற்றை விழுங்காதவாறு பார்த்துக் கொள்ளலாம். மேலும் விக்கலும் ஏற்படாமல் இருக்கும்.
* தாய்ப்பால் கொடுத்த பின்னர் குழந்தைகள் ஏப்பம் விட வேண்டும். அவ்வாறு ஏப்பம் வந்தால், தாய்ப்பாலின் போது, அவர்கள் விழுங்கிய காற்றானது வயிற்றில் இருந்து வெளியேறிவிடும். மேலும் சில சமயங்களில் அத்தகைய ஏப்பமும் குழந்தைகளுக்கு விக்கல் ஏற்படாமல் தடுக்கும்.
* குழந்தைகளுக்கு விக்கல் எடுக்கும்போது அவர்களது முதுகுப்பகுதியை மெதுவாக தேய்த்துக் கொடுத்தால், விக்கல் நின்று விடும்.
* குழந்தைகளுக்கு விக்கல் ஏற்படாமல் இருப்பதற்கு, அவர்களுக்கு பசிக்கும் முன் தாய்ப்பால் கொடுத்துவிட வேண்டும். விக்கல் ஏற்படுவதற்கு ஒரு காரணம் வாயு தொல்லை என்றும் சொல்லலாம். எனவே குழந்தைகள் வாயுத்தொல்லையினால்தான் விக்கல் எடுக்கிறார்கள் என்றால், அதன் அறிகுறியாக அவர்கள் வாந்தி எடுப்பார்கள். ஆகவே அவர்களுக்கு வாயுத்தொல்லை ஏற்படாமல் இருப்பதற்கு, அவ்வப்போது பால் கொடுக்க வேண்டும்.
* தாய்ப்பால் கொடுத்தும் விக்கல் நிற்கவில்லையெனில், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிட வேண்டும். அதைவிட்டு, தொடர்ந்து கொடுத்தால், பின் குழந்தை வாந்தி எடுக்க ஆரம்பித்துவிடும். பின்னர் இதுவே அவர்களை பெரும் அவஸ்தைக்குள்ளாக்கிவிடும்.
மழைக்கால பாதுகாப்பு
கோடைகாலம் முடிந்து மழைக்காலம் ஆரம்பிக்கும் போது குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். மழை நேரத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் அதிகமான நோய்கள் ஏற்படும். இதனால் குழந்தைகளுக்கு டெங்கு, மலேரியா, வைரஸ் போன்ற தொற்று நோய்கள் ஏற்படும்.
நோய்களை தடுக்க...குழந்தைகளுக்கு தரும் உணவு மற்றும் குடிநீர் சுத்தமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வயிற்றுப்போக்கு ஏற்படும். மேலும் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பால் பாட்டிலை சூடான நீரில் கழுவி, பின் பாலை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு பயன்படுத்தும் நாப்கின்களை மழைக்காலத்தில் ஈரமாக வைத்திருக்க கூடாது. இல்லையென்றால் அவர்களுக்கு தடிப்பு, அரிப்பு போன்றவை ஏற்படும். அதுமட்டுமின்றி வாரத்திற்கு ஒரு முறை நகங்களை வெட்டி விட வேண்டும். முக்கியமாக வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும். ஏனெனில் தண்ணீர் தேங்குவதன் மூலம் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |