மட்டக்களப்பு மாவட்டத்தின் , 136 கிராமங்களை உள்ளடக்கிய , 43 கிராம அலுவலர் பிரிவுகளைக்கொண்ட போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் 747 குடும்பங்கள் வீடுகள் இன்றி உள்ளதாக பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் தெரிவித்தார்.
2219 பேர் தற்காலிக வீடுகளில் வசித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.6000 குடும்பங்கள் குடி நீர் வசதி இன்றி அவதியுறுவதாக தெரிவித்த பிரதேச செயலாளர் 5602 குடும்பங்கள் மலசல கூட வசதி இன்றி வாழ்க்கையை இட்டுச்செல்வதாகவும் கவலை தெரிவித்தார். குடிநீரை பெற்றுக்கொள்ள நீண்ட தூரம் செல்வதாக தெரிவித்த பிரதேச செயலாளர் மீள் குடியேற்றத்தின் பின் படிப்படியாக இக்குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அத்துடன்போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் 50.5 சதவீதமான மக்கள் மின்சாரமின்மையால் மண்ணெண்ணெய் விளக்குகளை பயன்படுத்துவதாக அப்பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் தெரிவித்தார்.
இந்த நிலையில், இங்கு 49.2 சதவீதமான மக்களே மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர். 17 குடும்பங்கள் சூரியசக்தி மின்சாரத்தையும் 10 குடும்பங்கள் உயிரியல் வாயுவையும் பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
மீள்குடியேற்றத்தின் பின்னர் போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிராமங்களுக்கு மின்விநியோகிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய கிராமங்களுக்கும் மின்விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகப்பிரிவின் 45 கிராமசேவகர் பிரிவுகளில் 2872 குடும்பங்கள் நிரந்தர வீட்டு வசதிகள் இன்றி வாழ்வதாக மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் எஸ்.கோபாலரத்தினம் தெரிவித்தார்.மாங்காடு,தேத்தாத்தீவு,களுதாவளை,களுவாஞ்சிக்குடி,குருமன்வெளி,கோட்டைக்கல்லாறு,ஓந்தாச்சிமடம்,மகிழூர், போன்ற கிராமங்களில் அதிகளவு எண்ணிக்கையானோர் வீட்டு வசதிகள் இன்றி சீவியம் நடாத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.5257 குடும்பங்கள் 45 கிராமசேவகர் பிரிவுகளிலும் மலசல கூட வசதி இன்றி உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.மாங்காடு,தேத்தாத்தீவு, களுவாஞ்சிக்குடி, ஓந்தாச்சிமடம், போன்ற கிராமங்களில் மலசல கூட வசதி இன்றி வாழ்பவர்கள் அதிகம் என பிரதேச செயலாளர் கவலை தெரிவித்தார். மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகப்பிரிவின் 45 கிராமசேவகர் பிரிவுகளிலும் 6900 குடும்பங்கள் குடிநீpர் வசதி இன்றி அவதியுறுவதாக பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.
0 comments: