யோகாசன பயிற்சியில் ஈடுபட்ட களனி பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பில் கிரிபத்கொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்த மாணவியின் சடலம் கொழும்பு வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணத்திற்கு பின்னரான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
உயிரிழந்த மாணவி களனி பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் பயின்று வந்தவர். அவர் பயின்று வந்த நாடகக் கலை பாடநெறியில் யோகாசனமும் ஒரு பாடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments