Home » » மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு

வாழைச்சேனை கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் 2013ஃ2014ல் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழாவும் வாழைச்சேனை பிரதேச சாதனையாளர் மற்றும் மட்டக்களப்பு உதவி அரசாங்க அதிபர் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (10.07.2014) இடம் பெற்றது.
வாழைச்சேனை இந்துக் கல்லூரி பிரதான மண்டபத்தில் வாழைச்சேனை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கே.பேரின்பராஜா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் முதன்மை அதிதியாக ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் கே.மகேசன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் சிறப்பு அpதிகளாக கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ், கோறளைப்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.குணலிங்கம், கோறளைப்பற்று பிரதேச செயலக உதவி திட்டப் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன், வாழைச்சேனை இந்துக் கல்லூரி முதல்வர் கே.தவராஜா மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அதிதிகளால் வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களும் வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து கல்வியில் உயர் பதவிகளை வகிக்கும் சாதனையாளர்களும் கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக கடமையாற்றி தற்போது உதவி அரசாங்க அதிபராக கடமையாற்றும் எஸ்.கிரிதரன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டதுடன் இந்துக் கல்லூரி மாணவிகளது கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |