தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் கடந்த பத்து வருடங்களாக நடித்து வரும் பிரபலமான நடிகை திரிஷாவை சென்னை விமான நிலையத்தில் ‘நீங்கள் யார்? உங்கள் அடையாள அட்டையை காட்டுங்கள்” என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரபல கோலிவுட் நடிகை த்ரிஷா இன்று காலை 8 மணிக்கு தெலுங்கு படப்பிடிப்பு ஒன்றிற்காக ஐதராபாத் செல்வதற்காக சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு சென்றார். பேன்ட், சட்டை மற்றும் கூலிங்கிளாஸ் அணிந்து மாடர்னாக இருந்த த்ரிஷா,விமான நிலையத்தின் உள்ளே பயணிகள் ஓய்வெடுக்கும் அறையில் உட்கார்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த மத்திய பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் திரிஷா மேல் சந்தேகம் கொண்டு அவரை கேள்வி மேல் கேள்வி கேட்டு விசாரணை செய்தார். அவரை பார்த்து “நீங்கள் யார்? எங்கே போகிறீர்கள், எங்கிருந்து வருகிறீர்கள், என்று கேட்டதோடு அடையாள அட்டையை காட்டும் படியும் வற்புறுத்தினார்.
இதனால் முதலில் த்ரிஷா சிறிது அதிர்ச்சி அடைந்தாலும் பின்னர் சுதாரித்துக்கொண்டு தன்னுடைய அடையாள அட்டையை அந்த அதிகாரியிடம் திரிஷா காட்டினார். அதன் பிறகே அவர் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து திரிஷா கூறும்போது, ‘‘என்னிடம் அடைய அட்டை கேட்டது தவறல்ல. அச்சுறுத்தல்கள் இருப்பதால் பாதுகாப்பு பணியில் போலீசார் கவனமுடன் இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: