கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று வெள்ளிக்கிழமை காலை ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நடைபெற்றது.
இலங்கையில் தமிழர்களின் வரலாற்றின் மிகவும் முக்கியத்தும் மிக்க ஆலயமாகவும் கிழக்கு மாகாண தமிழர்களின் வரலாற்று போக்கிசமாகவும் ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது.
இராமாயண காலத்துக்கு முந்திய ஆலயமாகவும் இராவணன் மற்றும் இராமனால் வழிபட்ட ஆலயமாகவும் இந்த ஆலயம் இருந்துவந்துள்ளதை கர்ணபரம்பரை கதைகள் மூலமாக அறியமுடிகின்றது.
அத்துடன் இராமாயண காலத்தில் அனுமனின் வாழில் இராவணன் இட்ட தீயினை அணைத்த இடமாக ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தக்கேணி இருந்துள்ளதாகவும் புராதன கதைகள் மூலம் அறியலாம்.
இத்தனை சிறப்புமிக்க ஆலயத்தின் தேர் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.இந்த தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
நாளை சனிக்கிழமை ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் நடைபெறவுள்ளது.
இக்கோயில் மட்டக்களப்பு நகரிலிருந்து வடக்கே 2 மைல் தூரத்தில் மாநகரசபை எல்லையிலுள்ள அமிர்தகழி எனும் ஊரில் அமைந்துள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்த இவ்வாலயத்தின் கர்ப்பக்கிருகத்தில் சிவலிங்கம் உள்ளது. எனினும் விநாயகர் அங்கியுடனே சிவலிங்கம் காட்சி தருவதால் அடியார்களால் மாமாங்கப் பிள்ளையார் என்றே மூலமூர்த்தி போற்றப்படுகின்றார். கர்ப்பக்கிருகத்தோடு அந்தராளம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், தம்ப மண்டபம், கொடித்தம்பம், வசந்த மண்டபம், முன் மண்டபம் என்பவற்றோடு நவக்கிரகங்களுக்கு தனியான கோயிலுடன் கம்பீரமாக இவ்வாலயம் காட்சியளிக்கிறது.
மாமாங்கேஸ்வரர் ஆலயம் தென்னை, ஆல், அரசு, வேம்பு, குருந்து, கொக்கட்டி முதலான அடர்ந்த மரங்களின் நடுவே அமைதியான சூழலில் நெய்தல் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் நேர்வாசலில் குருந்த மரம் ஒன்று உள்ளது. ஆலயத்திற்கும் அதன் வடபுறத்தேயுள்ள அமிர்தகழி எனும் ஊர்மனைக்கும் இடையில் தாமரைப் பூக்கள் நிறைந்த மாமாங்கத் தடாகம் உள்ளது. இதுவே இவ்வாலயத்தின் தீர்த்தக் குளமாகும்.
ஆலய வரலாறுதொகுப்பு
அடிப்படையில் இவ்வாலயம் ஓர் சிவாலயமெனினும், இறைவனே கனவில் தோன்றி பிள்ளையாருக்கு ஆராதிக்கும்படி கட்டளையிட்டதாகவும் அப்போதிருந்து இங்கு பிள்ளையாருக்கு பூசைகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகின்றது.
ஆலய நிர்வாகம் கோட்டைமுனைப் பகுதி வேளாளர் பரம்பரையினருக்கும், அமிர்தகழி பகுதி ஏழூர்க் குருகுல வம்சத்தவர்களுக்குமே உரிமை உடையது. (1880ஆம் ஆண்டுப் பரம்பரையினர்)
ஆலய தீர்த்தக் குள்ம்தொகு
ஆலயத்தின் கிழக்கே தீர்த்தக்குளம் அமைந்துள்ளது. இக்குளத்திலேயே வருடம் தோறும் ஆடி அமாவாசை தினத்தன்று மாமாங்கேஸ்வரரின் தீர்த்தத் திருவிழா இடம்பெறுகின்றது. இத்தினத்திலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இத் திருவிழாவில் கலந்து கொள்வதுடன் பிதிர்க்கடன் நிறைவேற்றுவதும் சிறப்பம்சங்களாகும்.
இவ்வாலயத்தின் தீர்த்தக் குளம் இராமபிரானால் தோண்டப்பட்டதாலும், அனுமன் கொண்டு வந்த இலிங்கம் அங்கே புதைக்கப்பட்டதாலும், நோய்கள் பல தீர்க்கும் அற்புத சக்திகளையுடையது. இக்குளத்தில் காணப்படும் சந்தனச் சேறும் பல அரிய வைத்திய குணங்களுடையதெனவும், பல்வேறுபட்ட சரும நோய்களுக்குரிய நிவாரணி எனவும் நம்பப்படுகிறது.
நித்திய நைமித்திய வழிபாடுகள்தொகு
நித்திய பூசை
இவ்வாலயத்தில் தினமும் மூன்று வேளைகள் பூசை நடைபெறுகிறது.
மகோற்சவம்
மகோற்சவம் ஆடி அமாவாசைக்குப் பத்துத் தினங்களுக்கு முன்னர் கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகி ஆடி அமாவாசை அன்று தீர்த்தத் திருவிழாவுடன் நிறைவடைகின்றது.


0 comments: