காசல்ரீ பிரதேசத்திலுள்ள விவசாயி ஒருவரின் வாழைத் தோட்டத்தில் காய்ந்த அதிசயமான வாழைக் குழை அங்குள்ள மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
காசல்ரீ பிரதேசத்தில் குணதாச என்பவரின் வீட்டு தோட்டத்தில் அதிசயமான முறையில் வாழை குழை ஒன்று காய்த்துள்ளது.
வாழை குழை பூமியை நோக்கியே காய்ப்பது வழமை. ஆனால் மேற்படி குணதாச வீட்டில் வானத்தை நோக்கியவாறே இவ் வாழை குழை காணப்படுகின்றமை அதிசயமானதாகும்.
இதற்கு முன்பதாக இவ்வாறு காய்த்ததில்லையெனவும் இதுவே முதல் தடவை என குணதாசவின் மனைவி ரம்யாமாலினி தெரிவித்தார்.
இவ் வாழை குழையை இப்பிரதேசத்தில் உள்ள அதிகளவான மக்கள் வருகை தந்து பார்வையிடுகின்றமை குறிப்பிடதக்கது.
0 Comments