பிரேசில் நாட்டில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அரையிறுதியில் மிக மோசமான தோல்வியை அடைந்த பிரேசில் அணி, மூன்றாவது இடத்தை பிடிக்கும் போட்டியில் இன்று அதிகாலை நெதர்லாந்து அணியுட மோதியது. இந்த போட்டியிலும் பிரேசில் அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைக்கவில்லை. அந்த அணி நெதர்லாந்திடம் 0-3 என்ற கோல்கணக்கில் மீண்டும் படுதோல்வி அடைந்து உள்ளூர் ரசிகர்களை ஏமாற்றியது.
இந்த போட்டியில் நெதர்லாந்து அணி வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடினர். அவர்களுடைய ஆட்டத்திற்கு பிரேசில் வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் 0-2 என்ற முன்னணியில் இருந்த நெதர்லாந்து இரண்டாவது பாதியிலும் ஒரு கோல் போட்டது. பிரேசில் அணி கடைசிவரை ஒருகோல் கூட போடமுடியாமல் பரிதாபமாக இருந்தது.
நெதர்லாந்து அணியில் பெர்ஸி, பிளைண்ட், வினால்டம் ஆகிய வீரர்கள் தலா ஒரு கோல் அடித்தனர். 3 வது இடம் பிடித்த நெதர்லாந்து அணிவீரர்களுக்கு நேற்று வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது.
0 Comments