Home » » மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலையில் "சொல்முனை விவாதிகள் சம்மேளன" அங்குரார்ப்பண நிகழ்வு - 2014

மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலையில் "சொல்முனை விவாதிகள் சம்மேளன" அங்குரார்ப்பண நிகழ்வு - 2014

மாணவர்கள் மத்தியில் பேச்சுத்திறன் தர்க்கிக்கும் திறன் மொழியாற்றல் சிறந்த ஒழுக்கப்பண்பு கூட்டு முயற்சி சமூகத்துக்கு ஆரோக்கியமான கருத்துக்களை வெளியிடல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவற்றுக்கான சந்தர்ப்பங்களை உருக்குதல் மேம்படுத்தல் எனும் அடிப்படையிலும் 

வினைத்திறன் மிக்க செயற்பாட்டின் மூலமாக பேச்சாற்றலுடன் கூடிய ஆளுமை மிக்க சமூகத்தை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளிலும் சொல்முனை விவாதிகள் சம்மேளனம் இன்று (30.07.2014) மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடியில் உருவாக்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிபர் பொன்.வன்னியசிங்கம், தமிழ் துறை சார்ந்த பாட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் புதிய சொல்முனை விவாதிகள் சம்மேளனத்துக்கு தலைவர், செயலாளர், உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அத்துடன் தொழிநுட்பத்தின் வளர்ச்சியானது இன்றைய நிலையில் நன்மை பயக்கும் என ஒரு சாராரும், அதனை எதிர்த்து தொழிநுட்பத்தின் வளர்ச்சியானது தீமை பயக்கும் என அடுத்த சாராரும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டமையைக் காணக்கூயதாக இருந்தது. இந்நிகழ்வை ஏற்பாடு செய்து வழிநடத்தியவர் சுதர்சன் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
















Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |