Home » » மேலதிக வகுப்புகளுக்குத் தடை

மேலதிக வகுப்புகளுக்குத் தடை

2014 கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்காக நடத்தப்படும் மேலதிக வகுப்புகள் யாவற்றையும் நாளை நள்ளிரவு முதல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி வரை தடைசெய்யுமாறு பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ. எம்.என்.ஜே.புஸ்பக்குமார இதனைக் குறிப்பிட்டுள்ளார். 
இதன்படி பிரத்தியேக வகுப்புக்கள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் உள்ளிட்ட அனைத்தையும் தடை செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இவ்வருடத்திற்கான உயர்தரப் பரீட்சைகள் ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி முதல் 29ம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |