அளுத்கம தர்ஹா நகர் மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை கண்டித்து வாழைச்சேனை ஓட்டமாவடி ஏறாவூர் பகுதியில் இன்று செவ்வாய்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. நாட்டில் வாழும் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் அவஸ்தைக்குள்ளாக்கும் தொடர்ச்சியான செயற்பாடுகளைக் கண்டித்து நாடளாவிய ரீதியில் அமைதியான சாத்வீக கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததின் பேரில் இந்த ஹர்த்தால் இடம்பெறுகின்றது.
|
இதேவேளை ஹர்த்தால் கடையடைப்பை இன்று மேற்கொள்ள வேண்டாம் என திங்கட்கிழமை இரவு முதல் அடிக்கடி பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளில் பொலிஸாரினது அறிவித்தல் கூறப்பட்டிருந்த போதும் அவையெல்லாம் புறக்கணிக்கப்பட்டு முழுமையான ஹர்த்தால் இடம்பெறுவது இங்கு குறிப்பிடத்தக்கது. இது அடக்கு முறைக்குள்ளாகும் ஒரு ஒட்டுமொத்த சமூகத்தின் சாத்வீக உணர்வு ரீதியான வெளிப்பாடு என்று கடையடைப்பில் ஈடுபட்டுள்ள தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாத ஒரு வர்த்தக சமூகப் பிரதிநிதி கூறினார். இதேவேளை பாடசாலைகள் வழமைபோன்று இயங்குகின்றன.
|
Home »
எமது பகுதிச் செய்திகள்
» வாழைச்சேனை ஓட்டமாவடி ஏறாவூர் பகுதியில் இன்று செவ்வாய்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது
வாழைச்சேனை ஓட்டமாவடி ஏறாவூர் பகுதியில் இன்று செவ்வாய்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: