Home » » அனுராதபுரத்தில் பதுங்கியிருந்த றோ அதிகாரி!!

அனுராதபுரத்தில் பதுங்கியிருந்த றோ அதிகாரி!!

இந்தியாவின் றோ  அமைப்பினை சேர்ந்தவரென சந்தேகிக்கப்படும் அதிகாரி  ஒருவரை அநுராதபுரம் பகுதியில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். இவர் கடந்த 14 வருடங்களிற்கு மேலாக அங்கு வசித்து வந்திருந்ததாகவும் வன்னிக்கான வேவு நடவடிக்கைகளில் இவரே முக்கிய செயற்பாட்டாளராக இருந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.    கைது செய்யப்பட்டவரிடமிருந்து பல்வேறுப்பட்ட ஆவணங்கள், படங்கள் மற்றும் அடையாள அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இலங்கைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 44 வயதான சந்தேகநபர் இலங்கையில், ஹமாஸ் ஜமால்டீன் என்ற பெயரிலேயே இருந்துள்ளார். அவர் வடக்குக்கு அடிகொரு தடவை பயணித்துள்ளதாகவும் குறித்த சந்தேகநபர் இந்திய புலனாய்வு முகவர் நிலையத்தின் புலனாய்வு அதிகாரியாக கடமையாற்றுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |