இலங்கையில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு முறையாக தீர்வு அளி க்கப்படாமல் உள்ளது. இதனால் தமிழ் பேசும் மக்கள் நிம்மதியாக வாழமுடியாத சூழல் காணப்படுகின்றது. எனவே, இவர்களை அந்தமான் தீவிலாவது குடியேற்றி னால் நிம்மதியாக வாழ்வார்கள் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத் தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித் தார்.
இச்சங்கத்தின் 20 ஆவது வருடாந்த பொது க்கூட்டம் கல்முனை வை.எம்.சீ.ஏ. மண் டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில்:-
வடக்கு, கிழக்கில் வாழும் மக்கள் தமது ஜனநாயக உரிமையை பெற்று வாழ மாகாண சபை தேர்தலில் வாக்களித்து மக்கள் பிர திநிதிகளை தெரிவு செய்தார்கள். இந்த மக் கள் பிரதிநிதிகள் தமது அரசியல் செயற்பாடு களை முன்னெடுக்க முடியாத அள வுக்கு அடக்கு முறைகள் உள்ளதையும் மாகாண நிர்வாக செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத அளவுக்கு ஆளுநர்களின் கைகள் ஓங்கியுள்ளதையும் காணலாம்.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கி னேஸ்வரனிடம் சிறந்த நிர்வாகத்திறன் இருந்தும் வட மாகாண ஆளுநரின் கட்டுப்பாட்டால் அவரால் சுயமாக இயங்க முடியாதுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சரோ தூங்கும் முதலமைச்சராக உள்ளார். இம்மாகாண அபிவிருத்திக்கு வந்த பணத்தில் ஒரு பங்கை மீண்டும் திறைசேரிக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளார். கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சுறுசுறுப்பாக இயங்கி செய்த சேவைகள் இன்று இல்லாமல் உள்ளது. இந்நிலையில் மாகாண சபை ஒன்று கிழக்கிற்கு தேவையா என்று கேட்க விரும்புகின்றேன்.
இன்று கிழக்கு மாகாண சபையில் முறையான இடமாற்றத் திட்டம் இல்லை. அரச ஊழியர்கள் பந்தாடப்படும் நிலை உள்ளது. கிழக்கு மாகாண அமைச்சுக்களுக்கான ஆலோசனை சபை அமைக்கப்படவில்லை. இச்சபையை அமைப்பதில் காலம் கடத்துவது ஏன்?
சாதாரண சிற்றூழியர் ஒருவரைக்கூட நியமிக்க முடியாத அளவுக்கு வடமாகாண முதலமைச்சர் உள்ளார் என்றால் வெறும் கண்துடைப்புக்காகவே வடக்கு, கிழக்கு அதிகார பரவலாக்கல் இடம்பெற்றுள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது.
யாழ்.மாநகர சபையில் வெற்றிடமாகவு ள்ள பதவிகளுக்கு ஆட்களை நியமிக்க ஆளுநர் தடையாகவுள்ளார் என்றால் அங்கு என்ன ஆட்சி இடம்பெறுகின்றது.
இவை ஒருபுறமிருக்க, சிறுபான்மை இன மக்களின் வழிபாட்டுத் தலங்களை தாக்குவதை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த முடியாதுள்ளதென்றால் இந்நாட்டில் மதச் சுதந்திரம் உள்ளதா? என்று கேட்க வேண்டி யுள்ளது. எது எவ்வாறியிருப்பினும் இறை தீர்ப்பு கிட்டும் நாள் வெகு தொலை வில் இல்லை. அதற்காக நாம் கண்ணீர் மல்கி இறைவனை மன்றாடுவதை தவிர வேறு வழியில்லை என்றார்.
0 comments: