இங்கிலாந்தில் சிறுமி ஒருவர் தனது தோழியை காப்பற்றி விட்டு, தான் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்தின் செஃப்பில்ட் நகரத்தில் ஜாஸ்மின் சான் (14) மற்றும் அவரது தோழி டியா டக்கர் (12) ஆகிய இருவரும் தனது வீட்டின் அருகில் உள்ள தெருவை கடக்கும் போது கார் ஒன்று இடித்துள்ளது.
இதில் ஜாஸ்மின் தனது தோழியை தள்ளிவிட்டு, தான் காரில் அடிபட்டு உயிரிழந்துள்ளார். தற்போது டியா பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த வீரச்செயல் புரிந்த ஜாஸ்மினுக்கு, நேற்று நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும் விபத்து நடந்த இடத்தில் மலர் வளையம் மற்றும் பூச்செண்டுகள் குவிக்கப்பட்டுள்ளன.
மேலும் சமூக வலைதளத்திலும், ஜாஸ்மினின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செய்தி அனுப்பிய வண்ணம் உள்ளனர்.
இந்த விபத்து குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Home »
வெளிநாட்டுச் செய்திகள்
» வீர மரணம்: தோழியை காப்பாற்றிவிட்டு தன்னுயிர் விட்ட சிறுமி
வீர மரணம்: தோழியை காப்பாற்றிவிட்டு தன்னுயிர் விட்ட சிறுமி
Labels:
வெளிநாட்டுச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: