Home » » மோடி பிரதமர் ஆவார் 400 ஆண்டுகளுக்கு முன்பே கூறிய பிரெஞ்சு ஞானி.?

மோடி பிரதமர் ஆவார் 400 ஆண்டுகளுக்கு முன்பே கூறிய பிரெஞ்சு ஞானி.?

நரேந்திர மோடி தலைமையில் இந்தியா வல்லரசாக உருவெடுக்கும் என்பதை 400 ஆண்டுகளுக்கு முன்பே, பிரபலமான பிரெஞ்சு ஞானி ஒருவர் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்காய்ஸ் காதியர் என்ற பிரெஞ்சு எழுத்தாளர் இதுகுறித்து கூறுகையில், பிரான்ஸைச் சேர்ந்த அறிஞர் பாம்ப்ரெல்லே என்பவர் 1876ம் ஆண்டு இரண்டு பிரான்காஸ் பணத்திற்கு விற்கப்பட்ட ஒரு பழைய டிரங்குப் பெட்டியை கண்டுபிடித்துள்ளார். 

அதில் நாஸ்ட்ரடாமஸ் லத்தீன் மொழியில் எழுதிய ஒரு பழைய ஆவணம் கிடைத்தது. அவர், பல எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து அதை சரியாக எழுதி வைத்தவர் என்றும் கூறப்படுகிறது. மேலும், பிரெஞ்சுப் புரட்சி, அணு ஆயுதங்கள், ஹிட்லரின் வருகை, செப்டம்பர் 11 அமெரிக்கத் தாக்குதல் குறித்தும் நாஸ்ட்ரடாமஸ் சரியாக கணித்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் நாஸ்ட்ரடாமஸ் பாஜக, இந்தியா மற்றும் நரேந்திர மோடி குறித்தும் எழுதி வைத்துள்ளர். அதில் ஒரு வரியில், 21வது நூற்றாண்டில் பாஜக இந்தியாவை ஆதிக்கம் செலுத்தும், காங்கிரஸ் மெதுவாக மாயமாகிவிடும் என்று உள்ளதாக கூறப்படுகிறது. பாஜக பற்றி கூறுகையில், வாஜ்பாய் நாளடைவில் தீவிர அரசியலிலிருந்து ஒய்வு பெறுவார் என்றும் 

நரேந்திர மோடி உருவெடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மோடி பாகிஸ்தான், சீனா, திபெத் உள்ளிட்ட உலக நாடுகளுடன் எப்படியெல்லாம் உறவு வைத்திருப்பார் என்பது பற்றியெல்லாம் கூட அவர் கூறியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது....!
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |