Home » » மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறில் சிறுமியை துஸ்பிரயோகத்துக்குள்ளாக்கிய இளைஞன் கைது

மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறில் சிறுமியை துஸ்பிரயோகத்துக்குள்ளாக்கிய இளைஞன் கைது


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வியாழக்கிழமை கோட்டைக்கல்லாறில் உள்ள வீட்டில் தனிமையில் இருந்தபோது 15வயதுடைய சிறுமி 18 வயது இளைஞரால் பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டதாக குறித்த சிறுமியின் பெற்றோரால் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது.



இதன் கீழ் கோட்டைக்கல்லாறை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு நேற்று களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி முகமட் றியாழ் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் மே மாதம் 08ஆம் திகதி வரை குறித்த இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.



இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ சிகிச்சைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



இது தொடர்பிலான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |